தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5-ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கியது

Posted On: 09 DEC 2022 1:48PM by PIB Chennai

நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இதுவரை 5-ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022, அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ஜி  தொலைத்தொடர்பு சேவையை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த 2022 நவம்பர் 26-ம் தேதி வரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 50 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது. அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஏதுவாக மத்திய அரசு பின்வரும் கொள்கை நடவடிக்கைகளை முன்னிறுத்தி வருகிறது.

  • செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவையை தங்கு தடையின்றி வழங்க  ஏலம் மூலம் அலைவரிசை  ஒதுக்கீடு
  • அலைவரிசை பங்கீடு மற்றும் வணிகத்திற்கு அனுமதி
  • அலைவரிசை பங்கீட்டிற்கான கூடுதல் அலைவரிசை பயன்பாடு கட்டணம் 0.5 சதவீதம் நீக்கம்
  • தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

**************

AP/ES/KPG/IDS


(Release ID: 1882120)
Read this release in: Marathi