சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

Posted On: 13 JUL 2022 7:56PM by PIB Chennai

சென்னை விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுதளம் நாளை (14.07.2022) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் விமானங்களின் பாதுகாப்பான, விரைவான இயக்கம் உறுதி செய்யப்படும். மேலும், தற்போதுள்ள முதன்மை ஓடுபாதையின் கையாளும் திறனும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.

சென்னை விமான நிலையத்தில் 90 சதவீத உள்நாட்டு, சர்வதேச. சரக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வரும் முதன்மை ஓடுபாதைக்கு இணையானதாக ப்ராவோ ஓடுபாதை இருக்கும்.  ஏற்கனவே இந்த ஓடுபாதை வளைவாக இருந்ததால் முதன்மை ஓடுபாதைக்கு வருவதற்கு கூடுதல் நேரம் பிடித்ததோடு எரிபொருளும் அதிகமாக செலவானது. தற்போது ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டதால் விமானங்களின் இயக்கங்கள் துரிதமாவது உறுதி செய்யப்படுவதோடு அதிக போக்குவரத்துள்ள நேரங்களில் தாமதமாவதும்  தவிர்க்கப்படும்.

ப்ராவோ ஓடுபாதை செயல்பாட்டுக்கு வரும்  நிலையில் வெளிச்செல்லும் விரைவு ஓடுபாதையின் 1 மற்றும் 2-க்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இது நிறைவடைந்த பின் மணிக்கு 36  விமான இயக்கங்கள் என்பது மணிக்கு 45-50 இயக்கங்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் கார்ப்பரேட் தொடர்பு / மக்கள் தொடர்பு மேலாளர் திரு எல் விஷ்ணுதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

-------


(Release ID: 1841299)
Read this release in: English