சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகனின் பிறந்தநாளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
29 MAY 2022 11:55AM by PIB Chennai
தமது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவரது அன்பான வார்த்தைகள் நாட்டிற்காக பணியாற்றும் கூடுதல் சக்தியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“உங்களது சக்திவாய்ந்த தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், எனது சிறந்த பங்களிப்பை வழங்க நான் எப்போதும் கடுமையாக உழைப்பேன்”, என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அயராத முயற்சி, அபரிமிதமான ஆற்றல் மற்றும் திடமான உறுதிப்பாட்டுடன் புதிய இந்தியாவை கட்டமைப்பதை நோக்கி டாக்டர் முருகன் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். “பிறந்தநாள் என்பது வாழ்க்கையின் இணக்கத்தை நோக்கவும், மதிப்பிடவும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கான நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிக்க இது நமக்கு எழுச்சியூட்டுகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்திற்காக உங்களது பணியில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பும், உறுதித் தன்மையும் குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கிறது”, என்றும் பிரதமர் கூறினார்.
டாக்டர் முருகன், நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றிட வேண்டும் என்று வாழ்த்திய பிரதமர், ஒளிமயமான எதிர்காலத்திற்கும், வரவிருக்கும் காலங்களில் அவரது முயற்சிகளுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகனின் சுட்டுரைச் செய்தியை இந்த இணைப்பில் காணலாம்: https://t.co/uSJBQNP2OE
***************
(Release ID: 1829124)
Visitor Counter : 188