விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செலவில்லாத இயற்கை விவசாயத்தை செயல்படுத்துதல்: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்

Posted On: 25 MAR 2022 5:20PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய உள்நாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக பாரம்பர்ய விவசாய மேம்பட்டுத்  திட்டத்தின் துணை திட்டமாக பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதியை 2020-21-ம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது.

எந்த விதமான செயற்கை இரசாயன உள்ளீடுகளையும் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட முறைகளை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தாத காரணத்தால் இயற்கை விவசாயத்தின் செலவுகள் குறைந்துள்ளன.

பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதி திட்டத்தின் கீழ் குழுக்கள் உருவாக்கம், திறன் வளர்த்தல், தொடர் வழிகாட்டுதல்,

சான்றிதழ் வழங்கல்ஆகியாவற்றுடன்  ஆய்வுக்காக ஒரு ஹெக்டேருக்கு மூன்று வருடங்களுக்கு ரூபாய் 12200 வழங்கப்படுகிறது.

பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2000 ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளன. ரூபாய் 31.82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809688

                           ******************

 


(Release ID: 1809836) Visitor Counter : 139


Read this release in: English