சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார சேவைகள் அனைவருக்கும் சென்றடைவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

Posted On: 22 MAR 2022 4:47PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

அதிகரிக்கப்பட்ட அணுகல், சுகாதாரச்  சேவைகள் வழங்கலின் செலவைக்  குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சுகாதாரச்  சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதை

2017-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள், மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், தரமான மற்றும் குறைந்த விலையிலான சுகாதாரச்  சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக மாநிலங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதார மையங்களைப்  பராமரிப்பதற்கு போதுமான பணியாளர்கள், சேவைகள் அதிகம் சென்றடையாத மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு தரமான சுகாதாரச்  சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு தேசிய சுகாதார இயக்கம் ஆதரவு வழங்குகிறது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத்  திட்டம் மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் ஆகிய நான்கு முக்கிய திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808228

************


(Release ID: 1808392) Visitor Counter : 325
Read this release in: English