சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை
Posted On:
22 MAR 2022 4:51PM by PIB Chennai
பார்வை குறைபாடு குறித்து உலக சுகாதார அமைப்பு 2010-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகில் இந்தியாவிலும். சீனாவிலும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் அதிக அளவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாட்டில் பார்வை குறைபாடு வெகுவாக குறைந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் விரிவான பார்வை திறனை அளிக்கும் வகையில், 1976ஆம் ஆண்டு பார்வை குறைபாடு கட்டுப்பாட்டிற்கான தேசிய இயக்கம் தொடங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை பார்வை குறைபாடு கட்டுப்பாட்டிற்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு 2018-19-ஆம் ஆண்டில்.4,571 லட்சம் ரூபாயும், 2019-20-ஆம் ஆண்டில் 6,441.35 லட்சம் ரூபாயும், 2020-21-ஆம் ஆண்டில் 6,347.75 லட்சம் ரூபாயும், 2021-22ஆம் ஆண்டில் 6,312.03 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808234
***************
(Release ID: 1808343)