ஜல்சக்தி அமைச்சகம்

தண்ணீர் பரிசோதனை ஆய்வகங்கள்: தமிழ்நாட்டில் மொத்தம் 113

Posted On: 16 DEC 2021 3:28PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2024-ம் வருடத்திற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் தரமான, போதுமான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ஜல் ஜீவன் திட்டத்தை 2019 ஆகஸ்ட் முதல் மாநிலங்களுடன் இணைந்து இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தங்களின் வருடாந்திர ஒதுக்கீட்டில் 2% வரை நீரின் தரக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாநிலம், மாவட்டம், துணைப்பிரிவு மற்றும்/அல்லது தொகுதி அளவில் ஆய்வகங்களை மேம்படுத்தி தேசிய பரிசோதனை ஆய்வகங்களின் வாரியத்தின் (என்ஏபிஎல்) அங்கீகாரம் பெற மாநிலங்கள்/யூனியன்  பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு , 13.12.2021 நிலவரப்படி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிலை குடிநீர் தர  பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 2012  ஆகும்.

தமிழ்நாட்டில் மாநில அளவில் 1 ஆய்வகமும் , மாவட்ட அளவில் 31 ஆய்வகங்களும், வட்ட/துணை வட்ட அளவில் 81 ஆய்வகங்களும் என மொத்தம் 113 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. புதுச்சேரியில் மாவட்ட அளவில் 2 ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782216

                                         **********



(Release ID: 1782420) Visitor Counter : 119


Read this release in: English