வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்புதல்

Posted On: 08 DEC 2021 6:32PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதில் அளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் பின்வரும் தகவல்களை வழங்கினார்.

நாட்டின் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைக்காக 8 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 3 செயல்பாடுகளை தொடங்கியுள்ளன.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிசிசிஎல் பேர்ல் சிட்டி ஃபுட் போர்ட் எஸ் இ இஸட் லிமிடெட் ஒன்றாகும். உணவு பதப்படுத்துதல் துறையை சேர்ந்த இந்த மண்டலம் தனது செயல்பாடுகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 2019-2 0-ல் ரூ 61.75 கோடியும், 2020-21-ல்

ரூ 94.71 கோடியும், 2021-22-ல் 2021 செப்டம்பர் 30 வரை ரூ 48.03 கோடியும் வருவாய் ஈட்டி உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779402

                                                                                        *************

 

 

 



(Release ID: 1779494) Visitor Counter : 369


Read this release in: English