பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடி மக்களுக்கான நல திட்டங்களின் வளர்ச்சி நிலை குறித்து நேரில் ஆய்வு: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சத்தீஸ்கர் செல்கிறார் மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா
Posted On:
26 AUG 2021 5:19PM by PIB Chennai
மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27, 2021) அன்று சத்தீஸ்கர் மாநிலம் செல்லவுள்ளார். அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக விற்பனை செய்யும் முறை, வன் தன் திட்டம் மற்றும் முவ்வுணவுத் திட்டம் போன்ற பழங்குடியினருக்கான நலத் திட்டங்களின் வளர்ச்சிநிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொள்வார். பழங்குடியினர் கூட்டுறவு சந்தை வளர்ச்சி கூட்டமைப்பான ட்ரைஃபெட்டின் மேலாண் இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா, அமைச்சகம் மற்றும் ட்ரைஃபெட் அமைப்பின் மூத்த அதிகாரிகளும் அமைச்சருடன் செல்வார்கள்.
தமது சுற்றுப் பயணத்தின்போது ராய்ப்பூரில் மாநில அதிகாரிகளுடன் அமைச்சர் திரு முண்டா ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார். அதைத் தொடர்ந்து, பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தால்பூரில் அமைக்கப்பட்டுவரும் முவ்வுணவு உணவுப் பூங்காவின் பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிடுவார். திட்டங்களின் பயனாளிகளுடன் அமைச்சர் நேரடியாக உரையாடுவது மட்டுமல்லாமல், வன் தன் இயற்கை விருதுகள் நிகழ்ச்சியில் அவர்களுள் சிலரது மிகச் சிறந்த சாதனைகளையும் கௌரவிப்பார். துர்காவோனில் உள்ள வன் தன் விகாஸ் கேந்திர மையங்களுக்கும் நேரில் சென்று, பயனாளிகளுடன் அமைச்சர் கலந்துரையாடுவார்.
பழங்குடி மக்களின் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவதில் அடிமட்ட அளவில் சந்திக்கும் சவால்கள் மற்றும் திட்டங்களின் வளர்ச்சி நிலை குறித்தும் தமது பயணத்தின் போது அமைச்சர் ஆய்வு செய்வார். பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் முற்றிலும் மாற்றி அமைத்து, தற்சார்பு இந்தியாவை நோக்கிய வளர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்துவதே இதுபோன்ற நலத்திட்டங்களின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749278
----
(Release ID: 1749400)
Visitor Counter : 197