சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தபால்துறை குறைதீர்க்கும் நாள்

Posted On: 18 JUN 2021 7:20PM by PIB Chennai

அஞ்சல் துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 25.06.2021 (வெள்ளிக்கிழமை) அன்று அஞ்சல் துறை குறைதீர்க்கும் நாள் புதுஎண்-5, பழைய எண்-3, நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை 600 008-ல் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

சென்னை வடகோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் வாயிலாக 22.06.2021-க்குள் இவ்வலுவலகத்திற்கு வந்து சேரும் வண்ணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கொவிட் பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தபால் மூலம் பெறப்படும் குறைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல் தபால் நிலையங்களின் மூத்த கண்காணிப்பாளர், சென்னை மாநகர வட பிராந்தியம், சென்னை-600 008 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************

..

 



(Release ID: 1728305) Visitor Counter : 34


Read this release in: English