விவசாயத்துறை அமைச்சகம்
காரீப் கொள்முதல்: 85.71 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,11,700.70 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2021 12:17PM by PIB Chennai
காரீப் சந்தை பருவத்தில், காரீப் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
தமிழகம், பஞ்சாப் உட்பட நெல் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடந்து வருகிறது. கடந்த 27ம் தேதி வரை, 591.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்ட கொள்முதலை விட 19.20 சதவீதம் அதிகம்.
இதற்காக சுமார் 85.71 லட்சம் விவசாயிகள், ரூ.1,11,700.70 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.
மாநிலங்கள் வேண்டுகோள்படி, 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி வரை, 3,02,498.56 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி வரை, 18,25,805 விவசாயிகள் 88,90,237 பருத்தி கட்டுகள், ரூ.25,974.01 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693134
(வெளியீட்டு அடையாள எண்: 1693235)
வருகையாளர் எண்ணிக்கை : 144