சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சிஎஸ்ஐஆர்-யுஜிசி இணைந்து நடத்தும் நெட் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் ஒத்திவைப்பு

Posted On: 25 NOV 2020 7:07PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் சிஎஸ்ஐஆர் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய தகுதித் தேர்வு (நெட் ), நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 நவம்பர் 26ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மையங்களில் நடைபெறவிருந்த கணித அறிவியல் மற்றும் வேதியியல் அறிவியல் தேர்வு அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். csirnet.nta.nic.in  அல்லது www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் புதிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இந்தத் தகவல், தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் டாக்டர் சாதனா பராசர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*******************



(Release ID: 1675755) Visitor Counter : 68


Read this release in: English