சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்தியன் ஆயில், புதுமையான ‘’உமிழ்வில்லா மின்சார வாகன’’ தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது


வாகன மின்னூட்டத்திற்கு பசுமை மின்சாரத்தை வழங்குவதை இத்தீர்வு நோக்கமாக கொண்டுள்ளது

Posted On: 20 NOV 2020 5:52PM by PIB Chennai

நாட்டில் மின்சார வாகனத்தை பிரபலப்படுத்தும் முயற்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம், ‘’உமிழ்வில்லா மின்சார வாகனம்’’ குறித்த  ‘’கருத்தியல் நிரூபண’’ சாத்தியக்கூறு ஆய்வை பெங்களூருவில் தனக்கு சொந்தமான  ஒரு எரிபொருள் நிலையத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

 

‘’ஜீரோ உமிழ்வு மின்சார வாகனம்’’ என்ற கருத்தியல், மின்சார வாகனத்திற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் ஜீரோ  உமிழ்வை உறுதி செய்வதாகும். மின்சார வாகன மின்னூட்ட முறையை, டெக் மகேந்திரா நிறுவனத்தின் ஆதரவுடனான ஹைக்கே எனர்ஜி என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. சூரிய சக்தியைப் பயன்படுத்தி, மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்யப்படும். மின் கட்டமைப்பில் மேம்பாடு தேவையில்லை. குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில், சிஸ்டம் உருவாக்கத்தால், தொகுப்பு விரிதிறன் மேம்படுத்தப்படும்.

இந்த சோதனை குறித்து உரையாற்றிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சில்லரை விற்பனை) திரு விக்யான் குமார், ‘’இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாற்று எரிசக்தி அமைப்பின் ஒரு பகுதியாக, நாங்கள் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கான 54 மின்கல மின்னூட்ட நிலையங்களை/ஸ்வாப் நிலையங்களை, பல்வேறு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில்  அமைத்துள்ளோம். இஸ்ரேலின் பின்னர்ஜியில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான அலுமினியம் –ஏர் பேட்டரி உற்பத்தி  நிறுவனத்தை அமைக்க சிறிய அளவு பங்குகளை நாங்கள் வைத்துள்ளோம். மின்சார வாகன பின்பற்றுதலில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால், தொகுப்பு கொள்ளளவு மற்றும் சவால்களை எதிர்கொள்ள, எங்களது எரிபொருள் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட பசுமை எரிசக்தியை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தீர்வை கண்டுபிடிப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஹைக்கே எனர்ஜி உருவாக்கிய புதுமையான தீர்வு, இந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் சாத்தியக்கூறை வெளிப்படுத்தியுள்ளது. பெங்களூரு முழுவதும் எரிசக்தி நிலையங்களில் முன்மாதிரி ஆய்வுகளை நாங்கள் நடத்தவுள்ளோம். எங்களது எரிபொருள் நிலையங்களை சூரிய எரிசக்தி மயமாக்குவதில்  செய்யப்பட்ட முதலீட்டை இந்த தனித்துவமான தீர்வு ஊக்குவிக்கும். இது எங்களது மின்சார வாகன மின்னூட்ட முன்முயற்சியில் சிறந்த அடித்தளத்தை வழங்கும்’’, என்று கூறினார்.

 

இந்த தொழில்நுட்பம் ‘’வீரிய மைக்ரோகிரிட்ஸ்’’ –ஐ பயன்படுத்தி செயல்திறன் மிக்க மின்சார வாகன மின்னூட்டத்திற்கு வழிவகுக்கும். சூரிய சக்தி ஒளிமின்னழுத்த மின்கலங்களுடன், தற்போது உள்ள தொகுப்பு உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் வீரிய மைக்ரோகிரிட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த ஜீரோ உமிழ்வு மின்சார வாகன முறை அதிகம் பின்பற்றக்கூடிய முறையாகும். 100 சதவீதம் தூய்மையான எரிசக்தியை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன விநியோக உபகரணத்திற்கு கூடுதல் சுமையை இது தடுக்கிறது. இதன் பயனாக, தொகுப்பு கட்டமைப்புக்கு கூடுதல் முதலீடு இன்றி  இந்த முறையை பயன்படுத்த முடியும் என சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர் (கார்பரேட் கம்யூனிகேசன்ஸ்) திரு ஆர் சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

*******************

 



(Release ID: 1674517) Visitor Counter : 127


Read this release in: English