சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படுகிறது

அடுத்த ஆண்டு மார்ச் முதல் தேசிய ரேசன் அட்டை

Posted On: 01 OCT 2020 4:10PM by PIB Chennai

நாடு முழுவதும் பிரபலமடைந்த ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தமிழகத்தில் இன்று முதல், 2020 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, இத்திட்டம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்  நடைமுறைக்கு வந்துவிடும். பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகள், ஒரு மாதத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி/ கோதுமை வீதம் நவம்பர் மாதம் வரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என பிரதமர் அறிவித்தார்.  தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பெறும் மாதாந்திர பொருட்களுடன் கூடுதலாக இதனைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முக்கிய அம்சமான, ரேசன் அட்டை மாற்றும் திட்டம், ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாறிச் செல்லும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு  பெரிதும் உதவும். தங்களது மாதாந்திர தேவைக்கான பொருட்களை அருகில் உள்ள ரேசன் கடைகளில் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பொது விநியோக முறையின் ஒருங்கிணைந்த மேலாண்மை 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நாடு தழுவிய ரேசன் அட்டை மாற்றும் முறையை அறிமுகப்படுத்துவதாகும். ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை முறை மூலம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இது பயனளிக்கும். சொந்த மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள ரேசன் அட்டைகளைப் பயன்படுத்தி, புலம் பெயரும் தொழிலாளர்கள் வேலைக்காக செல்லும் இடங்களில், விரும்புகின்ற கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்லலாம். நியாய விலைக் கடைகளில் வைத்திருக்கும் பயோமெட்ரிக் உபகரணத்தில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்களைப் பெறலாம்.

தமிழகத்தில், 34,773 நியாய விலைக் கடைகள் உள்ளன. 2.09 கோடி குடும்ப அட்டைகள் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன. இதில் 6.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில், அனைத்து ரேசன் கடைகளும், டிஜிடல் ரேசன் ஸ்மார்ட் அட்டைகளை வழங்கியுள்ளன. மாநிலத்தில் ePOS கருவி மூலம் பயோமெட்ரிக் முறை செயல்பட்டு வருகிறது. அனைத்து ePOS கருவிகளும், பயோமெட்ரிக் விரல் ரேகையைச் சரிபார்க்கும் கருவியுடன் மேம்படுத்தப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. அரசு அதிகாரியான திரு. தருண், ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இருப்பிடத்தை மாற்றுகின்றவர்களுக்கு, உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். ஒரு மாநிலத்திலிருந்து மற்றோர் மாநிலத்துக்கும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கும் மாறிச் செல்வபவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். முன்பு தற்போது உள்ள ரேசன் அட்டையை ரத்து செய்து, மற்றொரு மாநிலத்தில் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.  திருச்சியில், பொது விநியோக கடை விற்பனையாளர்கள், வழக்கமாக அளிக்கும் அரிசியுடன், செறிவூட்டப்பட்ட அரிசியையும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டை ஒன்றுக்கு, 5 கிலோ, 15 கிலோவாகவும், 10, 10 கிலோ விகிதத்திலும் இரு அரிசிகளையும் வழங்க வேண்டும். இந்த நடைமுறை வழக்கமாக அளிக்கப்படும் அரிசி வழங்கும் வரை அக்டோபர் மாத கடைசி வரையில் அமலில் இருக்கும்.

வேலை வாய்ப்பு மற்றும் இதர வேலைகளுக்காக தங்கள் இருப்பிடத்தை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். கோவிட்-19 முடக்கத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் போது, வேலை நிமித்தம் இடத்தை மாற்றிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே பயன் விளைவிக்கும்.

பொது விநியோக முறை மூலம் இலவச அரிசி

ரேசன் அட்டை

செறிவூட்டப்பட்ட அரிசிப் பை


(Release ID: 1660681)
Read this release in: English