தேர்தல் ஆணையம்
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு
Posted On:
29 SEP 2020 4:16PM by PIB Chennai
தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்பட அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம் ஏழு தொகுதிகளுக்குத் தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட மாநிலங்களில் தற்போதைய நிலவரப்படி காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதி விவரம் வருமாறு;
வரிசை எண்
|
மாநிலம்
|
சட்டப்பேரவை தொகுதிகளின் எண் & பெயர்
|
-
|
அசாம்
|
74-ரங்கபுரா
|
-
|
அசாம்
|
108-சிப்சாகர்
|
-
|
கேரளா
|
106-குட்டநாடு
|
-
|
கேரளா
|
117-சாவரா
|
-
|
தமிழ்நாடு
|
10-திருவொற்றியூர்
|
-
|
தமிழ்நாடு
|
46-குடியாத்தம்(SC)
|
-
|
மேற்கு வங்கம்
|
13-பாலக்கட்டா(SC)
|
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மேற்கூறிய இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் சிரமம் உள்ளதாக அம்மாநிலங்களின் தலைமை செயலர்கள்/ தலைமை தேர்தல் அதிகாரிகளிடமிருந்து, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் வரப்பெற்றது. அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுள் காலம் முறையே, 31.05.2021, 01.06.2021, 24.05.2021, 30.05.2021 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மேற்கூறிய ஏழு சட்டப்பேரவை தொகுதிகளில் இந்த நிலையில் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றம், சட்டபேரவைகளில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற்ற பின்னர் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
**************************
(Release ID: 1660057)
Visitor Counter : 133