சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் குறைதீர்வு முகாம்

Posted On: 15 SEP 2020 2:43PM by PIB Chennai

வரும் 24.09.2020 அன்று காலை 11 மணியளவில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது.  அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 வாயிலாக தபால் சேவைகள் – அதாவது மணியார்டர் / பதிவுத் தபால் / சேமிப்பு வங்கி முதலிய சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ, அல்லது மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) வாயிலாகவோ, 21.09.2020 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, “தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசலை தலைமை அஞ்சலகம், சென்னை – 600002” அவர்களுக்கு “குறைதீர்வு முகாம்” என்ற தலைப்பில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் 24.09.2020 அன்று காலை 11 மணியளவில் பயனாளிகள் குறைதீர்வு முகாமில் நேரில் வந்தும் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா சாலை தலைமை அஞ்சலக அதிகாரி திரு சு குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

******************



(Release ID: 1654439) Visitor Counter : 50


Read this release in: English