சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தமிழக மாநில நிதித் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

Posted On: 20 AUG 2020 5:07PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம், தமிழ்நாடு அரசுக்கான மாநில நிதித் தணிக்கை அறிக்கையை தமிழக ஆளுநரிடம் அளித்துள்ளது. இம்மாதம் 18-ம் தேதியன்று ஆளுநரிடம் அளிக்கப்பட்ட இந்த அறிக்கை, 2019 மார்ச் 31-ம் தேதியன்று முடிவடைந்த முந்தைய ஆண்டுக்கானது. இது மாநில சட்டப்பேரவையில் சமர்ப்பிப்பதற்காக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று சென்னை தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் முதன்மை தலைமை கணக்காளர்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

*******



(Release ID: 1647312) Visitor Counter : 103