சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கொச்சி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் துணைத் தலைவராக திரு. சிரில் சி. ஜார்ஜ் பொறுபேற்றார்.

Posted On: 18 AUG 2020 8:06PM by PIB Chennai

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் துணைத் தலைவர் திரு. சிரில் சி. ஜார்ஜ் , கொச்சி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் துணைத்தலைவராக இன்று (!8/08/2020) பணியில் சேர்ந்தார். கொச்சி துறைமுகத்தின் துணைத்தலைவராக இருந்த திரு..கே.மெகரா, கொல்கத்தா சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகப் பொறுப்பு கழகத்தின் கொல்கத்தா டாக் சிஸ்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பெரிய துறைமுகங்களில்  அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ள திரு. சிரில் சி. ஜார்ஜ் (சொந்த ஊர் தொடுப்புழா) எம்எஸ்டபிள்யு, எம்பிஏ (எச்ஆர்) மற்றும் எல்எல்பி பட்டம் பெற்றவர். அவர் 1987 –ஆஅம் ஆண்டு  காண்ட்லா துறைமுகத்தில் தொழிலாளர் நல அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். சென்னைத் துறைமுகத்துக்கு வரும் முன்பு , மர்மகோவா துறைமுகம்( துணைத்தலைவர்), காண்ட்லா டாக் தொழிலாளர் வாரியம் ( துணைத்தலைவர்), கொச்சி துறைமுகம் (செயலர்) ஆகிய பொறுப்புகளை வகித்தார். கொச்சி துறைமுகத்தின் செயலராக இருந்தபோது, ஐசிடிடி, வல்லார்பாதம் இணைப்புத் திட்டங்கள், பெட்ரோநெட் எல்என்ஜி திட்டம், கடல்சார் பணிமனையை கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு மாற்றியது உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.

பெரிய துறைமுகப் பொறுப்பு கழக (2017) மனிதவளம் மற்றும் நேரடி ஆட்சேர்க்கை விஷயங்களை ஆய்வு செய்வதற்கான  இந்திய துறைமுக சங்க குழு உள்பட பல்வேறு குழுக்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார்.



(Release ID: 1646783) Visitor Counter : 113


Read this release in: English