புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும்

Posted On: 30 JUN 2020 8:52PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய வானிலைத்துறையின் தேசிய வானிலை கணிப்பு மையம் / பிராந்திய வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது : 

· கிழக்கு உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு, பரவலானது முதல் மிகப் பரவலான மழை இருக்கும். ஜூலை 2, 3 தேதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

· மத்தியப்பிரதேசத்தில் அடுத்த மூன்று தினங்களில், ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும். அடுத்த ஐந்து தினங்களில் சத்தீஷ்கரில் கனமழை பெய்யக்கூடும். ஜூலை 1 முதல் நான்காம் தேதி வரை பிகார் மற்றும் விதர்பா பகுதிகளில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக் கூடும்.

· மேற்கு கடற்கரைப் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களில் கேரளாவில், கனமழை பெய்யக் கூடும்.



(Release ID: 1635559) Visitor Counter : 42


Read this release in: English , Hindi , Manipuri