Ministry of Earth Sciences

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தம்: தெற்கு குஜராத்-வடக்கு மகாராஷ்டிரா கடற்கரைப் பகுதிகளுக்கு புயலுக்கு முந்தைய கண்காணிப்பு

Posted On: 01 JUN 2020 3:23PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/மண்டல சிறப்பு வானிலை மையம் /புயல் எச்சரிக்கை பிரிவு ஆகியற்றின் மாலை கண்காணிப்பு நிலவரம்:

  1. தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிக்கு மேலே , மே 31 மாலை 5.30 மணி நிலவரப்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வுநிலையமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து கிழக்கு மத்திய அரபிக் கடலுக்கு மேலே புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இது ஜூன் 2ம் தேதி காலை வரை வடக்கு நோக்கி நகர்ந்து, பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி சுழன்று வடக்கு மஹாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோரப் பகுதியை ஜூன் 3ம் தேதி திங்கள் அன்று சென்றடையும் எனத் தெரிகிறது.
  2. ஓமன் தெற்கு கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய ஏமன் பகுதி மீதான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கி.மீ வேகத்தில் நகர்ந்து, மே 31, 2020 மாலை 5.30 மணி நிலவரப்படி   சலாலாவுக்கு(ஓமன்) மேற்கே 110 கி.மீ தொலைவிலும், அல் கயத்துக்கு(ஏமன்) வடகிழக்கே 120 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தொடர்ந்து தாழ்வு நிலையாகவும், அதன்பின் படிப்படியாக வலுவிழக்கும் எனத் தெரிகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி மெதுவாக நகரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • தெற்கு அரபிக் கடல், மாலத்தீவு கொமோரின் பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள வரிகுடா ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சூழல்  சாதகமாகி கொண்டிருக்கின்றன.

*****



(Release ID: 1628290) Visitor Counter : 155