PIB Headquarters

14 5 20 20 அன்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை, நோய் எதிர்ப்பு சக்திக்கான உபகரணங்களை விநியோகித்தது.

Posted On: 15 MAY 2020 3:31PM by PIB Chennai

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையர் வியாழக்கிழமையன்று, கோவிட்-19 முன்னணிப் போராளிகள் 200 பேருக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கான சாதனங்களை வழங்கினார். CISF, குடியேற்றம், சுகாதாரம், இந்திய விமான நிலைய ஆணையம் போன்ற பல்வேறு அமைப்புகளின் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்கள், சுங்கத்துறைப் பணியாளர்களுக்கும் இந்த சாதனங்கள் வழங்கப்பட்டன.

நோய் வராமல் தடுப்பதற்கு உடல்நலத்தைப் பேணும் வகையில், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டிருந்த தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதற்கான வழிமுறைகளின் படி இந்த சாதனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ச்யவன்ப்ராஷ், ஹெர்பல் டீ (கடா) பொட்டலங்கள், துளசி, கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி, லவங்கம், உலர் திராட்சை ஆகியவை கொண்ட பொட்டலங்கள் இந்த நோய் எதிர்ப்பு கிட்டுகளில் இருக்கும்.

 

 

***********



(Release ID: 1624058) Visitor Counter : 107