PIB Headquarters
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை நிதித்துறை அதிகாரி நியமனம்
Posted On:
28 NOV 2019 4:58PM by PIB Chennai
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய முதன்மை நிதித்துறை அதிகாரியாக திரு.புவன் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை வரும் 01.12.2019 முதல் அவர் ஏற்றுக் கொள்வார். இவர் இதுவரை இவ்வங்கியின் பொது மேலாளராக பணியாற்றியதுடன் வரவு-செலவு மேலாண்மைத் துறையையும் கவனித்து வந்தார்.
இதுவரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளராகவும், வரவு-செலவு மேலாண்மைத் துறை பொறுப்பாளராகவும் மற்றும் முதன்மை நிதித்துறை அதிகாரியாகவும் இருந்த திரு.ராதா வெங்கடகிருஷ்ணன் 30.11.2019 முதல் ஓய்வு பெறுவதையொட்டி புதிய முதன்மை நிதித்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய முதன்மை நிதித்துறை அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் திரு.புவன் சந்திரா, ஜி.பி.பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளநிலைப் பட்டமும் மற்றும் விரிவாக்கம் தொலை தொடர்புத்துறையில் பட்ட மேற்படிப்பும் பயின்றவர் என்று இவ்வங்கியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
*********
(Release ID: 1594049)
Visitor Counter : 90