PIB Headquarters

இந்திய அஞ்சல் துறை

Posted On: 15 NOV 2019 12:24PM by PIB Chennai

அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு தபால்தலை மையத்தில் குழந்தைகள் தின கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான சிறப்பு பேச்சு போட்டி (”தபால் தலைகள் மீது குழந்தைகளுக்கு உள்ள ஈடுபாடு”) 14.11.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். தொடக்கப் பள்ளிகள் பிரிவில் சென்னை வேளச்சேரியில் உள்ள சான் அகாடமி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் செல்வன். கார்த்திக் சிவகுமார் முதல் பரிசினையும், சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆர்.பி.ஏ.என்.சி. தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி. பி.ஹர்சினி இரண்டாம் பரிசினையும், சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி. வி.நேத்ரா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

உயர்நிலைப் பள்ளிகள் பிரிவில் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஹிந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி. ஹரிணி நாராயணன் முதல் பரிசினையும், சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் செல்வன். பி.யஷ்வந்த் இரண்டாம் பரிசினையும், சென்னை செம்பியத்தில் உள்ள கே.ஆர்.எம். பொதுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி. கே.ஹரிணி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

சென்னை நகர மண்டல அலுவலகத்தின் உதவி இயக்குனர் திரு.ஆர்.பாலச்சந்தர் மற்றும் அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அதிகாரி திரு.வீ.கனகராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவி-மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்கள். மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவியருக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

 

***************



(Release ID: 1591704) Visitor Counter : 158


Read this release in: English