PIB Headquarters
அஞ்சல் குறை தீர்ப்பு நாள்
Posted On:
08 NOV 2019 5:50PM by PIB Chennai
அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் வட்டார அளவிலான அஞ்சல் குறை தீர்ப்பு நாள் 11.12.2019 (புதன்கிழமை) அன்று முற்பகல் மணி 11.30-க்கு சென்னை 600 002, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை தமிழ்நாடு வட்டார முதன்மை தலைமை போஸ்ட் மாஸ்டர் மற்றும் வட்டார அஞ்சல் குறை தீர்ப்பு அமைப்பின் தலைவர் நேரடியாகக் கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பார். வாடிக்கையாளர்கள் அஞ்சல் சேவைகள் குறித்த குறைகளை சென்னை-600 002, தமிழ்நாடு வட்டார முதன்மை தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தின் உதவி இயக்குனர் திருமதி. எம்.விஜயலட்சுமிக்கு 27.11.19 அன்றோ அதற்கு முன்னதாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை மின்னஞ்சல் மூலமாக அஞ்சல் குறை தீர்ப்பு நாள் என்ற தலைப்பிட்டு pq.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
மணியார்டர் / பதிவு அஞ்சல் / விரைவு அஞ்சல் / மதிப்பை செலுத்தி பெறும் அஞ்சல் / காப்பீடு செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அனுப்பிய வாடிக்கையாளர்களின், புகார்களில் பொருட்களின் எண், தேதி மற்றும் அனுப்பிய அலுவலகம், அனுப்பியவர் மற்றும் பெறுபவர் முழு முகவரி ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்புத் திட்டம் அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவை குறித்த புகார்களில் கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண், வைப்பு செலுத்தியவர் / காப்பீடு செய்தவர் பெயர் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயர், மீட்கப்பட்டது பற்றிய விவரம் மற்றும் அஞ்சல் துறையின் இதர குறிப்புகள் இருப்பின் அவற்றுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு வட்டார முதன்மை தலைமை போஸ்ட் மாஸ்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இதனைத் தெரிவிக்கிறது.
*******
(Release ID: 1591046)
Visitor Counter : 173