PIB Headquarters
பொருளாதாரம் மற்றும் வருவாய்த்துறை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக திரு விஸ்வநாத் சிங் ஜாடோன் பொறுப்பேற்பு
Posted On:
03 JUL 2019 11:21AM by PIB Chennai
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/scan0001M8IU.jpg)
தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வருவாய்த்துறை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக திரு விஸ்வநாத் சிங் ஜாடோன் கடந்த திங்களன்று (01.07.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவையின் 2003-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் தெர்மல் இன்ஜினியரிங் மற்றும் சான்றளிக்கப்பட்ட தகவல் முறை தணிக்கைத்துறையில் எம் டெக் பட்டம் பெற்றவர்.
முன்னதாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் மூத்த துணைத்தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார். அதற்கும் முன்னதாக லண்டனில் உள்ள கணக்குத் தணிக்கை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
----
(Release ID: 1576743)
Visitor Counter : 122