பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2017-18 முதல் 2019-20 திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:11PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரத் துறை அமைச்சரவைக் கமிட்டி கூட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டம் 2017-18 முதல் 2019-20 வரையிலான காலத்துக்கு நீடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான செலவீடு மொத்தம் ரூ. 2,250 கோடியாகும்.

 

திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) மத்திய திட்டமாகும். கொள்கை வகுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறித்த நேரத்தில் நம்பகமான புள்ளிவிவரங்கள் உரிய வகையில் கிடைப்பதற்காக போதிய ஆள் பலம், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம் செய்வதுதான் இதன் ஒட்டுமொத்த குறிக்கோளாகும்.

*****



(Release ID: 1546032) Visitor Counter : 114


Read this release in: English , Marathi , Bengali