பிரதமர் அலுவலகம்

உலகளாவிய வாகன நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 07 SEP 2018 6:14PM by PIB Chennai

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வாகன மற்றும் போக்குவரத்து நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டயோடா எஸ்.ஏ.ஐ.சி. மோட்டார் கார்ப்பரேஷன், போஷ், ஏ.பி.பி. லிமிடெட்      ஹுண்டாய் மோட்டார் கம்பெனி, போர்டு ஸ்மார்ட் மொபிலிட்டி எல்.எல்.சி. மற்றும் உபேர் ஏவியேஷன் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர்நிலை பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்தனர்.

இந்த நிறுவனங்கள் புதுதில்லியில் நடைபெறும் மூவ் எனும் உலகளாவிய நகர்வு உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளன.



(Release ID: 1545369) Visitor Counter : 103