பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

இந்தியாவுடனான தத்தெடுக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது ஆஸ்திரேலியா

Posted On: 14 AUG 2018 4:07PM by PIB Chennai

நாடுகளுக்கு இடையே தத்தெடுத்தலுக்கான ஹேக் உடன்படிக்கையின்படி இந்தியாவுடனான தத்தெடுத்தல் திட்டத்தை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சில முகமைகள் நாடுகளுக்கு இடையேயான தத்தெடுத்தலில், சில குழந்தைகளை தவறாக பயன்படுத்தப்படுத்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 8 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை ஆஸ்திரேலிய அரசு முன்னதாக நிறுத்தி வைத்திருந்தது.

தற்போது தத்தெடுத்தல் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படுவதை அடுத்து, இந்தியாவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பல பெற்றோர்களின் விருப்பம் நிறைவேறும்



(Release ID: 1543004) Visitor Counter : 146


Read this release in: English