பாதுகாப்பு அமைச்சகம்

இணைய பாதுகாப்புக் கட்டமைப்புக்கான பயிலரங்கு 2018

Posted On: 19 JUN 2018 4:18PM by PIB Chennai

   பாதுகாப்புத் துறைக்காக, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித்துறை இணைய பாதுகாப்பு கட்டமைப்பு பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிலரங்கை பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். 

   நிகழ்ச்சியில் பேசிய திருமதி சீதாராமன், பாதுகாப்புத்துறை இணைய அச்சுறுத்தல்களுக்கு இலக்காகும் துறையாக உள்ளது என்றும், அதனால் நமது இணைய வெளியை  உத்தேச தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமானது என்றும் கூறினார். இணைய பாதுகாப்பு கட்டமைப்பை வகுத்துள்ளதுடன், இணைய பதுகாப்பு தொடர்பான விஷயங்களை பல்வேறு மட்டத்தில் சமாளிக்கும் இணைய பாதுகாப்பு பிரிவுகளை உருவாக்கியுள்ளதற்காக பாதுகாப்பு உற்பத்தித்துறைக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.   இணையவெளியில் ஆதிக்கம் மிகுந்த சக்தியாக மாறும் நாட்டின் தொலைநோக்குக்கு ஏற்ப இந்த அனைத்துப் பிரிவுகளிலும், தேவைப்படும் பணியாளர்களை அமர்த்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

-----



(Release ID: 1535929) Visitor Counter : 115


Read this release in: English , Hindi , Marathi , Bengali