வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சேவைகள் வர்த்தகம் உலகளாவிய வர்த்தக முறையில் இணைய வேண்டும்: சுரேஷ் பிரபு

Posted On: 18 JUN 2018 4:43PM by PIB Chennai

சரக்குகள் விற்பனையை விட சேவைகள் விற்பனை வேகமாக வளருகிறது என்றும் இத்தகைய மாற்றங்கள் உலகளாவிய வர்த்தக முறையில் ஏற்கப்பட வேண்டும் எனவும் மத்திய தொழில், வர்த்தகம் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு கூறியுள்ளார். புதுதில்லியில் ஸ்மட்ஜா அண்ட் ஸ்மட்ஜாவுடன் இணைந்து ஆனந்தா செண்டர் மற்றும் இந்திய தொழில்கூட்டமைப்பு ஜூன் 18-19 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த 6வது வளர்ச்சி உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

சரக்குகள் வர்த்தகத்தைப் போலன்றி சேவை வர்த்தகத்தில் மக்களின் நகர்வு தேவை என அமைச்சர் குறிப்பிட்டார். 2026-27ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இதில் 1 டிரில்லியன் டாலராக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 12 சதவீதம் வளர்ச்சி கண்டதாகவும் அவர் கூறினார்.

சேவைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஒரு முழுமையான நோக்குடன் அரசு செயல்பட்டுவருவதுடன், 12 முன்னோடி சேவைகளை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் செலவிடப்பட உள்ளது. முதல்முறையாக புதிய சந்தைகளில் பொருட்களுக்கான யுக்தி உருவாக்கப்படுகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் ஏற்றுமதியும் மேம்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

***



(Release ID: 1535891) Visitor Counter : 102


Read this release in: English