பாதுகாப்பு அமைச்சகம்

பணியின்போது ஊனமுற்ற வீரர்கள் ஆண்டு

Posted On: 18 JUN 2018 5:31PM by PIB Chennai

நாட்டுச் சேவைக்காக பணிபுரியும் போது ஊனமுற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில் நாட்டுப் பாதுகாப்பு உணர்வை கொண்டாட 2018ம் ஆண்டை இந்திய இராணுவம் பணியாற்றும் போது ஊனமுற்ற வீரர்களின் ஆண்டாக அனுசரிக்கிறது. இந்த வீரர்களின் துயரங்களைப் போக்குவது இதன் முதன்மைக் கண்ணோட்டமாகும். இவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்காகக் கடமையாற்றி ஊனத்தை தங்களது வாழ்க்கையில் அனுபவித்து வருகின்றனர்.

ஊனம் காரணமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, உடல் நிலை அல்லது மருத்துவ நிலை காரணமாக வேலை இன்றி இருக்கும் இராணுவ வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பது இந்த ஆண்டின் நோக்கமாகும்.

இத்தகையை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் மனஅழுத்தம் மற்றும் துயரங்களை இந்திய இராணுவம் அங்கீகரிகிறது.

                             *****



(Release ID: 1535829) Visitor Counter : 112


Read this release in: English