உள்துறை அமைச்சகம்
லக்னோ யோகா தின விழாவில் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பங்கேற்பு
Posted On:
18 JUN 2018 4:34PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் 4வது சர்வதேச யோகா தின விழாவில் 2000 மத்திய ஆயுத காவல்படை பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2000 மத்திய ஆயுதப் படை பணியாளர்கள் (எஸ்.எஸ்.பி./சி.ஆர்.பி.எஃப்./ஐ.டி.பி.பீ.) பங்கேற்று யோகாசன செயல்விளக்கம் செய்து காட்டும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
டேராடூனில் நடக்கும் யோகா செயல்விளக்க நிகழ்ச்சிக்கான தொடர்பு அமைப்பாக இந்தோ திபெத் எல்லை காவல்படை (ஐ.டி.பி.பீ.) நியமிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் ஐ.டி.பி.பீ. படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.
******
(Release ID: 1535811)
Visitor Counter : 96