வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ராய்ப்பூரை பத்தாவது பொலிவுறு நகரமாக பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 14 JUN 2018 12:49PM by PIB Chennai

புதிய ராய்ப்பூர் பொலிவுறு நகரத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று  தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மைய புதிய ராய்ப்பூர் நாட்டின் பத்தாவது பொலிவுறு நகரமாகும்.  ஏற்கெனவே அகமதாபாத், வதோதரா, சூரத், புனே, நாக்பூர், ராஜ்கோட், விசாகப்பட்டினம், போபால், காக்கிநாடா ஆகிய நகரங்கள் பொலிவுறு நகரச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஹர்தீப் சிங் பூரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் டாக்டர். ரமன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

                                *******



(Release ID: 1535511) Visitor Counter : 117


Read this release in: English , Marathi , Bengali