பிரதமர் அலுவலகம்

ஆரோக்கியமான இந்தியா-வலுவான இந்தியா (10.05.2018 நிலவரப்படி)

Posted On: 07 JUN 2018 2:49PM by PIB Chennai

இந்திரதனுஷ் இயக்கம்

தொடங்கிய தேதி: 25.12.2014

நோக்கம்:

  • 2020க்குள் குறைந்தபட்சம் 90% குழந்தைகளுக்கு  முழுமையான நோய் எதிர்ப்பு அளிப்பதை எட்டும்  காலம் தற்போது 2018ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • ஏழு உயிர்கொல்லி நோய்களுக்கு எதிராக வழக்கமான நோய் எதிர்ப்புத் திறனூட்டும் சுற்றுகளில் தவறவிட்ட, விடுபட்ட குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் முழுமையாக நோய்தடுப்புத் திறனை அளித்தல்.

சாதனைகள்:

  • இந்திரதனுஷ் இயக்கம் 528 மாவட்டங்களை உள்ளடக்கி நான்கு கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில்:   
      • 3.15 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
      • 80.58 லட்சம் குழந்தைகள் முழுமையாக நோய் தடுப்புத் திறன் பெற்றனர்.
      • 80.63 லட்சம் கருவூற்ற பெண்கள் நோய்தடுப்புத் திறன் பெற்றனர்.
      • 91.94 லட்சம் வைட்டமின் ஏ மருந்து வழங்கப்பட்டது.
      • 79.73 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
      • 2.73 கோடி ஸிங்க் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.
  • தீவிர இந்திரதனுஷ் இயக்கம் குஜராத் மாநிலம் வாட் நகரில் 2017 அக்டோபர் 8 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.  121 மாவட்டங்கள், 17 நகர்ப்புற பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் 52 மாவட்டங்கள், (24 மாநிலங்களில் மொத்தம் 190 மாவட்டங்கள்/நகர்ப்புற பகுதிகள் ) தீவிர நோய் தடுப்புத் திறன் பிரச்சாரத்திற்கு உட்பட்டவையாகும்.

கருவுற்ற மற்றும் குழந்தை ஈன்ற பெண்களுக்கு வலிப்பு நோயை ஒழித்தல்

  • கருவுற்ற மற்றும் குழந்தை ஈன்ற பெண்களுக்கு வலிப்பு நோய் 2015 மே மாதத்தில் நாட்டிலிருந்து முற்றிலுமாக  ஒழிக்கப்பட்டது. சர்வதேச இலக்காக நிர்ணயிக்கப்பட்ட டிசம்பர் 2015-க்கு மிகவும் முன்னதாகவே நமது நாட்டில் இலக்கு எட்டப்பட்டது.

புதிய தடுப்பூசிகள்

போலியோ ஒழிப்பு தடுப்பூசி (ஐபிவி):

  உலக போலியோ ஒழிப்பு செயல் திட்டத்திற்கு இணங்க 2015 நவம்பரில் ஆறு மாநிலங்களில்  ஐபிவி அறிமுகம் செய்யப்பட்டது. 2016 ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐபிவி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து 2017 டிசம்பர் வரை சுமார் 3.87 கோடி  ஐபிவி சொட்டு மருந்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது.

ரோட்டடா வைரஸ் தடுப்பூசி:

  • ரோட்டா வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிஸா ஆகிய நான்கு மாநிலங்களில் மார்ச் 2016ல் தொடங்கப்பட்டது.
  • பின்னர் ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிஸா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம் என ஒன்பது மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • 2017 டிசம்பர் வரை சுமார் 1.42 கோடி ரோட்டா வைரஸ் தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்பட்டன.

தட்டம்மைத் (எம்ஆர்) தடுப்பூசி:

  • ஒன்பது மாதக் குழந்தைகளிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களை இலக்காகக் கொண்டு எம்ஆர் தடுப்பூசி இயக்கம் 2017 பிப்ரவரி 5 அன்று கர்நாடகா, தமிழ்நாடு, கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ஆந்திர பிரதேசம், சண்டிகர், டாமன் டையூ, தாத்ரா நாகர்ஹவேலி, தெலங்கானா, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கேரளா ஆகிய 13 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில், எம்ஆர் இயக்கம் நிறைவுபெற்றது. (அருணாச்சல பிரதேசத்திலும், ஒடிஸாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. )
  • இந்த மாநிலங்களில் 2018 மார்ச்  வரை சுமார் 7.7 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜப்பானிய மூளையழற்சித் தடுப்பூசி:

  • ஜப்பானிய மூளையழற்சி (ஜேஇ) பற்றிய பிரச்சாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2015ல் வழக்கமான நோய் தடுப்புத் திறன் இயக்கத்தில் ஜப்பானிய மூளையழற்சி பரவலாக காணப்படும். 230 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஒரு வயது குழந்தை முதல் 15 வயதுவரை உள்ள சுமார் 15.6 கோடி பேருக்கு ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி போடப்பட்டது. 99.20 லட்சம் குழந்தைகளுக்கு ஜேஇ தடுப்பூசி போடப்பட்ட உத்தரபிரதேசத்தில் ஜேஇ பரவலாக உள்ள 38 மாவட்டங்களில் சிறப்பு ஜேஇ மறு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
  • வயதுவந்தோருக்கான ஜேஇ பிரச்சார இயக்கம் அடையாளம் காணப்பட்ட 31 மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின்கீழ் சுமார் 3.29 கோடி வயது வந்தோருக்கு ஜேஇ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நுரையீரல் நோய் கூட்டுத் தடுப்பூசி (பிசிவி):

  • குழந்தைகள் இறப்புக்கு பெரிதும் காரணமான நிமோனியா காய்ச்சல் மரணத்தைக் குறைப்பது.
  • இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் (6 மாவட்டங்கள்) பீகார் (17 மாவட்டங்கள்) என 3 மாநிலங்களில் 2017 மே 13அன்று இந்த தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்கள் முழுமைக்கும் தடுப்பூசித் திட்டம் விரிவாக்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவற்றின் பகுதிகளில்  3 ஆண்டுக் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 2018 ஜனவரி வரை 14 லட்சம் பிசிவி தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளன.

ஜனனி சுரக்ஷா யோஜனா

  • மருத்துவமனைகளில் மகப்பேறு என்பது 47%லிருந்து (டிஎல்எச்எஸ்-5, 2007-08) 78.9%ஆக(என்எப்எச்எஸ்-4, 2015 -16)  அதிகரித்துள்ளது.

 

புதிய உடனடித் திட்டங்கள்

பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்-பிஎம்எஸ்எம்ஏ

தொடக்கத் தேதி: 4.11.2016

நோக்கம்:

  • கருவுற்ற பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஒன்பதாம் தேதி விரிவான தரமான மருத்துவ சேவை கட்டணமின்றி வழங்குவதை உறுதி செய்தல்.
  • அங்கீகரிக்கப்பட்ட அரசு சுகாதார மையங்களில் கருவுற்ற பெண்களுக்கு ஆறாவது / ஒன்பதாவது மாதங்களில் பிஎம் எஸ்எம்ஏ குறைந்தபட்ச பராமரிப்புத் திட்டங்களை உறுதி செய்கிறது.

சாதனைகள்:

  • 1.16 கோடிக்கும் அதிகமான கருவுற்ற பெண்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
  • அனைத்து மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் 12900 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
  • அனைத்து மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் பிஎம்எஸ்ஏ இணையப் பக்கத்தில் 4,900 தன்னார்வத் தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஆபத்து நிறைந்த கருத்தரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆறு மாத பேறுகால விடுப்பு:

பணியாற்றும் பெண்களுக்கான பேறுகால விடுப்பை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகப்படுத்த பேறுகால விடுப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

நோய்கள் ஒழிப்பு

   தொற்றும் நோய்களை ஒழித்தல்  - 2018க்குள் தொழுநோயையும், 2020க்குள் தட்டம்மையையும், 2025க்குள் காசநோயையும் ஒழிப்பதற்கான செயல் திட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதாரப் பராமரிப்பு-குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்தல்.

  • உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 1084 அத்தியாவசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், நுகர்வோருக்கு மொத்தம் ரூ.9241 கோடி பயன் கிடைத்துள்ளது. (31.03.2018 நிலவரப்படி)
  • இருதயத்தில் பொருத்தும் ஸ்டெண்டுகள் 85% விலைக் குறைப்பு.
  • முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக் கட்டணம் 69%  குறைப்பு.

பிரதமரின் ஜன்அவ்ஷாதி பாரி யோஜனா (பிஎம்பிஜேபி)

  • 9.05.2018 நிலவரப்படி மொத்தம் 3517 பிரதமரின் பாரதீய ஜன்அவ்ஷாதி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மே 2014ல் இது 99ஆக இருந்தது.
  • அனைத்து வகையான சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கியதாக இந்த உடனடித் திட்டத்தின் பொருட்கள் பெட்டி 700க்கும் அதிகமான மருந்துகள், 154 அறுவை சிகிச்சை சாதனங்களுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
  • முத்திரையிடப்பட்ட மருந்துகளைவிட, 50-90%  விலைக்குறைப்பு.

 

 

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம்(ஏபி-பிஎம்என்எச்பிஎம்)

தொடக்க தேதி:

பிப்ரவரி 1, 2018: பட்ஜெட் உரை: 2018  -19ல் ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தின் (ஏபி-பிஎம்என்எச்பிஎம்) தொடக்கம்.

ஏப்ரல் 14, 2018: சண்டிகரில் உள்ள பிஜப்பூரில் முதலாவது சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் பிரதமரால் தொடங்கப்பட்டது.

நோக்கம்:

  • இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை என பத்து கோடி ஏழை மற்றும் பாதிப்படையும்  குடும்பங்களுக்கு (சுமார் 50 கோடி பயனாளிகளுக்கு ) விரிவான சுகாதாரத் திட்டம் கிடைக்கச் செய்தல்.
  • ஏபி-பிஎம்என்எச்பிஎம் தொடங்கப்பட்டபின், ஆர்எஸ்பிஒய்/எஸ்சிஎச்ஐஎஸ் அதில் மேம்படுத்தப்படும்.

சிறப்பம்சங்கள்:

  • குடும்பத்தின் அளவை  கணக்கில் கொள்ளாமல், அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக பெண் குழந்தை மற்றும் மூத்த குடிமக்களுக்கும் திட்டப் பயனை உறுதிசெய்தல்.
  • இந்தியா முழுவதும் பட்டியலிடப்பட்ட (அரசு மற்றும் தனியார்) மருத்துவமனைகளில் பயனாளிகள் கட்டணமின்றியும், காகித குறிப்புகள் இன்றியும்,   மருத்துவ சேவை பெறுவது.
  • பிஎம்-ஆர்எஸ்எஸ்எம்-ன் பயன் மதிப்பு ரூ.5,00,000.
  • 10 கோடிக்கும் அதிகமான பயனாளி குடும்பங்கள் பயன்பெறும். (எஸ்இசிசி தகவல் விவரத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவை)
  • எஸ்இசிசி தகவல் விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்குத் தகுதி பெற்றவைஆதார் இல்லாததற்காக இந்தத் திட்டத்தின் கீழான பயன்களை எவருக்கும் மறுக்கக்கூடாது.
  • நெகிழ்வுத் தன்மையுடன் அமலாக்க ஒப்பந்தம்-இந்த திட்டத்தை அமல்படுத்த  நடைமுறையில் உள்ள அறக்கட்டளை / சங்கம்/ லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு அல்ல (எஸ்என்ஏ) அல்லது புதிய அறக்கட்டளை / சங்கம்/ லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு அல்ல [ மாநில சுகாதார பாதுகாப்பு இயக்க முகமை] அமைத்து பயன்படுத்தலாம்.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (எச்டபிள்யுசி)

  1. சமூகத்திற்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்கு 1.5 லட்சம் துணை மையங்களும், ஆரம்ப சுகாதார மையங்களும், சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
  2. வீடுகளுக்கு / குடியிருப்புகளுக்கு அருகிலேயே சேவைகள் வழங்கப்படுகின்றன.
  3. ஆரம்ப சுகாதார கவனிப்பு, முதியோர் சுகாதார கவனிப்பு, நோய் தடுப்பு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் உட்பட விரிவான ஆரம்ப சுகாதார கவனிப்புத் திட்டங்களை எச்டபிள்யுசி வழங்கும்.
  4. பட்ஜெட்டின் மூன்றில் ஒரு பங்கு, ஆரம்ப சுகாதார சேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.

ஸ்வச் ஸ்வஸ்த் சர்வத்ரா

   தூய்மை இந்தியா இயக்கம்(எஸ்பிஎம்) மற்றும் காயகல்ப் திட்டத்தின் சாதனைகளுக்கு கூடுதல் உந்துதலாக இருப்பதற்கு குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் இணைந்த முயற்சி.

பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம்(பிஎம்-என்டிபி)

  • ஏழைகளுக்கு கட்டணமின்றியும் என்எச்எம் திட்டத்தின்கீழ் அனைத்து நோயாளிகளுக்கும் மானியத்துடனும், டயாலிசிஸ் சேவை கிடைக்கச் செய்வது.
  • 2016ல் நாடு முழுவதும் 219 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 356 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மையத்திலும் ஆறு டயாலிசிஸ் கருவிகள் என்பது பத்து கருவிகள் வரை அதிகப்படுத்தப்படும்.
  • 22.84 லட்சம் டயாலிசிஸ் சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • 2.38 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
  • 497 செயல்பாட்டு டயாலிசிஸ் பிரிவுகள் / மையங்கள்.
  • 3,330 செயல்பாட்டு டயாலிசிஸ் கருவிகள்.

காயகல்ப்

பொது சுகாதார மையங்களில் சுத்தம், சுகாதாரம், நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகளை மேம்படுத்த தொடங்கப்பட்டது காயகல்ப் விருதுகள். 2015-16ல் மாவட்ட மருத்துவமனைகளில் அமலாக்கப்பட்டு, பின்னர் 2016-17ல் சிஎச்சி-களுக்கும் பிஎச்சி-களுக்கும், 2017-18 நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது

சர்வதேச யோகா தினம்-ஐடிஒய்

  • வீட்டிலும், உலக அளவிலும் யோகாவை பரவலாக்குவது.
  • முதலாவது  ஐடிஒய் புதுதில்லியில் ஜூன் 21லும், இதைத் தொடர்ந்து 2016ல் சண்டிகரிலும், 2017ல் லக்னோவிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
  • ஜூன் 21-, சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்தது.
  • யுனெஸ்கோவின் மனித சமூக பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.
  • பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்  விளையாட்டுக் கட்டமைப்பு மற்றும் சாதனங்களில் சேர்க்கப்பட்டிருப்பதோடு அனைத்து பள்ளிகளில் உடற்பயிற்சி செயல்பாட்டின் பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

முக்கிய கொள்கை முன் முயற்சிகள்

தேசிய சுகாதார கொள்கைகள்

  • 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை உருவாக்கியுள்ள தேசிய சுகாதாரக் கொள்கை 2017,  தேசிய சுகாதாரக் கொள்கை 2002 உருவாக்கப்பட்டதற்கு பிறகு, தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாறி வரும் சமூக-பொருளாதார மற்றும் நோய் தொற்றியல் சூழல்களால் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளது.
  • அடிப்படை சுகாதார வசதிகள், விரிவானதாகவும், உலகளாவியதாகவும் இருக்கும் வேளையில், தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு வசதிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். நோயாளி சார்ந்த அணுகுமுறை அடிப்படையில், நோயாளிகளின் குரலுக்கு செவி சாய்த்தல், தரமான  பராமரிப்பு, இடைத்துறை இணைதல்சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்தல், குறைந்த செலவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்துதல் போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்தப்படும்.

 

மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017

  • இந்தியாவில் மனநல ஆரோக்கியத்திற்காக உரிமைகள் சார்ந்த நிலையான கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதோடு, மனநல சுகாதார சேவைகளில் சமத்துவம் மற்றும் சமபங்கிற்கு வழிவகுக்கவும், மனநல ஆரோக்கிய பாதிப்புடைய மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்பு கிடைக்கப்பெறவும், வாழ்க்கையை கண்ணியமாகவும், கவுரமாக வாழ்வதற்கும் வகை செய்யும்.

எச்..வி. & எய்ட்ஸ் (தடுப்பு & கட்டுப்பாடு) சட்டம், 2017

  • ஐ நா சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்கின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் நோய்தொற்றுகளை ஒழிப்பதே நோக்கம்.
  • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம், வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள், வீடு வாடகைக்கு விடுதல் போன்றவற்றில் பாரபட்சம்  காட்டக்கூடாது. அத்துடன் அரசு அல்லது தனியார் அலுவலகங்களில்  காத்திருக்கச் செய்வதோ, சுகாதார பராமரிப்பு மற்றும் காப்பீடு வசதிகள்  கிடைப்பதையோ மறுக்கக் கூடாது.

குறைந்த விலை மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான நம்பகமான உள்உறுப்புகள் (அம்ரித்)

    அம்ரித் மருந்தகங்கள், புற்றுநோய் மற்றும் இதய ரத்தநாள நோய்களுக்கான மருந்துகள் மற்றும் இருதயத்தில் பொருத்தக்கூடிய செயற்கைக் கருவிகளை, சந்தை விலையைவிட 60 முதல் 90% வரை குறைந்த விலையில் வழங்குகின்றன.

  • இதுவரை 22 மாநிலங்களில்  124 கடைகள் திறக்கப்பட்டு,  5,200க்கும் மேற்பட்ட மருந்துகள் (இதய ரத்தநாளம், புற்றுநோய், நீரிழிவு, ஸ்டென்ட் போன்றவை உட்பட), செயற்கை உள் உறுப்புகள், அறுவை சிகிச்சையின் போது ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய சாதனங்கள் மற்றும் இதரப் பொருட்கள் சந்தை விலையைவிட 50%  வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
  • 05.03.2018 வரை  பயனடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 60.49 லட்சம்.
  • அதிகபட்ச சில்லறை விற்பனை விலை கொண்ட மருந்துகள் ரூ.566.34 கோடி அளவுக்கு விற்பனை  செய்யப்பட்டிருப்பதுடன், நோயாளிகளுக்கு  ரூ.311.99 கோடி அளவுக்கு சேமிப்புக் கிடைத்துள்ளது.

மூன்றாம் நிலை சுகாதார & மருத்துவக் கல்வி

பிரதமரின் சுகாதாரக் காப்பீட்டுத்திட்டம்

நோக்கம்: குறைந்த செலவில் / நம்பகமான மூன்றாம்நிலை சுகாதார சேவைகள் கிடைப்பதில் நிலவும், மண்டல அளவிலான சமச்சீரற்ற நிலையை  போக்குவதுடன், நாட்டின் தரமான மருத்துவக்கல்வி வசதிகளை ஏற்படுத்துவது.

உட்கூறுகள்:

பிரதமரின் சுகாதாரக் காப்பீட்டுத்திட்டம் இரண்டு கூறுகளைக் கொண்டது.

  1. நாட்டில் இதுவரை  முறையான சுகாதார வசதி கிடைக்காத பகுதிகளில் எய்ம்ஸ் போன்ற புதிய மருத்துவ கல்வி நிறுவனங்களை  உருவாக்குதல்.
  2. தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல்

முன்னேற்றம்:

  • எய்ம்ஸ் போன்ற இருபது புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
  • 73 அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்

விவரம்:

  • 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
    • ராய்ப்பூர், பாட்னா, ஜோத்பூர், போபால், ரிஷிகேஷ் மற்றும் புவனேஷ்வர்
    • 2018 செப்டம்பருக்குள் முழு செயல்பாட்டு நிலை எட்டப்படும்

 

  • 8 கூடுதல் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி
    • ரேபரேலி (உத்தரபிரதேசம்), ஆந்திராவில் குண்டூர் அருகே  மங்களகிரி, மேற்கு வங்கத்தில் கல்யாணி, மகாராஷ்ட்ராவில் நாக்பூர், உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், பஞ்சாபில் பட்டின்டா, அசாமில் காம்ரூப் மாவட்டம், இமாசலப்பிரதேசத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோத்திபுரா.

 

  • மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கருத்துரு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • இது தவிர 3 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்வி:

  • கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 92 மருத்துவக் கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு, 15,354            எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது (அரசு கல்லூரிகளில் 6519 மற்றும் தனியார் கல்லூரிகளில் 8835).
  • மாவட்ட / சிறப்பு மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்துதல்என்ற மத்திய அரசு உதவியுடனான திட்டத்தின் மூலம் 600 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 12,646 முதுநிலை மருத்துவ இடங்கள் (விரிவான & உயர்சிறப்பு படிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்காக மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல்என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தின் மூலம் 1,500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய், நீரிழிவு, இதய ரத்தநாள நோய்கள் & பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டம்.

  • 435 மாவட்ட தொற்றாநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் 2145 சமுதாய மருத்துவ மையங்களை ஏற்படுத்துதல்
  • 2018 மார்ச் 15 வரை தொற்றாநோய்த் தடுப்பு சிகிச்சை மையங்களில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • 150க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்றாநோய்களுக்கானநோய் தடுப்பு, பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள்மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதன் மூலம் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது.
  • 34  மாநில புற்றுநோய் மருத்துவமனைகள் / மூன்றாம் நிலை  புற்றுநோய் பராமரிப்பு மையங்களில், புற்றுநோய் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் தேசிய புற்று நோய் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

தேசிய உடல் உறுப்பு மாற்றுத்திட்டம்

  • நாடு தழுவிய அளவில், உடல் உறுப்பு மாற்று, மீட்பு மருத்துவமனைகள் மற்றும் திசு வங்கியை ஏற்படுத்துவதற்காக, தேசிய உறுப்பு திசு மாற்று உயர்மட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்துதல்
  • தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, அசாம், மேற்குவங்கம் மற்றும் சணடிகர் யூனியன் பிரதேசத்தில் 5 மண்டல உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை வாங்கி, விநியோகிப்பதற்காக, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் கீழ், தேசிய அளவிலான ஆன்லைன்  பதிவு  அமைப்பை ஏற்படுத்துதல்.
  • 24X7 கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1800 114770 செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • உறுப்பு தான வீதம் (உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை, 100 கோடி மக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில்) 2012-13 முதல் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

மாற்றியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்

  • மருந்துகளால் குணப்படுத்த முடியாத காசநோய்க்கு, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடியாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை மையங்கள் மூலமாக சிகிச்சை அளித்தல்.
  • மருந்து எதிர்ப்பு காசநோயை,  74 கலாச்சார & மருந்து பீடிகை பரிசோதனைக்கூடங்களில்  பரிசோதிப்பது. இவற்றில்  55 ஆய்வுக் கூடங்கள் மதிப்பீட்டு ஆய்வு  போன்ற அதிவேக மூலக்கூறு சோதனை வசதிகள் உடையவையாகும்.
  • காசநோய் அறிகுறிகள் குறித்து வீடு வீடாக ஆய்வு செய்து 5.5 கோடி மக்களிடம் தீவிர பரிசோதனை நடத்துதல்.
  • காசநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும், நேரடி உதவித்திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து உதவியாக மாதந்தோறும் ரூ.500 வழங்குதல்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்:

  • ஆன்டி ரெட்ரோ வைரஸ் பாதிப்புடைய அனைத்து நோயாளிகளையும், அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தி அளவு அல்லது சிகிச்சை நிலையைக் கருத்தில் கொள்ளாமல்,   “பரிசோதித்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • கூடுதல் எச்..வி. தொற்று உடைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை, இந்தக் கொள்கை அறிவிக்கப்பட்ட எட்டு மாதங்களில் ஆன்டிரெட்ரோ வைரஸ் சிகிச்சை வரம்பிற்குள் கொண்டுவருதல்.
  • எச்..வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 11.75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆன்டிரெட்ரோ வைரஸ் சிகிச்கை அளிக்கப்படுகிறதுமார்ச் 2014-ஐ விட 54% அதிகமாகும்.
  • தாயிடமிருந்து குழந்தைக்கு எச்..வி. தொற்று பரவுவதை 2020க்குள் ஒழிப்பது என்ற இலக்கை அடையும் நோக்கில் கடந்த ஓராண்டில், 2 கோடிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடம் எச்..வி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மருந்து கட்டுப்பாடு:

  • மருத்துவ கருவிகள்  விதி  2017 வெளியிடப்பட்டுள்ளது. சிக்கல் அடிப்படையிலான வகைப்பாடு, உரிமம் வழங்குதல், மற்றும் மருத்துவ சாதனங்களை முறைப்படுத்த இந்த விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.
  • 344 நிரந்தர மருந்துக் கலவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • புதிய அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தேசிய பட்டியல்- 2015 இறுதி செய்யப்பட்டுள்ளதுஇதில் தற்போது 376 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இதயத்திற்கான ஸ்டென்ட் கருவிகளும், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தேசிய பட்டியல் 2015-ல் சேர்க்கப்பட்டு, நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், இவற்றுக்கு அதிகபட்ச விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்:

  • பெட்டியில் அடைத்தல் மற்றும் பெயரிடல் விதிமுறைகள்: புகையிலைப் பொருட்கள் பற்றிய சுகாதார எச்சரிக்கை இடம் பெற வேண்டிய அளவு, 2016 ஏப்ரல் 1 முதல், புகையிலைப்  பொருட்கள் அடங்கிய பெட்டியின் பிரதான பரப்பளவில் 85% அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • புகைப்பிடித்தலை கைவிடுவோருக்கு உதவும் வகையில் செயல்படும் தொலைபேசி எண்ணையும் சுகாதார எச்சரிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற விதி, 2018 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பீடி: பீடி,வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதுடன், அனைத்து வகையான புகையிலைப்பொருட்களும், 28% சரக்கு மற்றும் சேவை வரி வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • புகையிலை பயன்பாடு குறைப்பு: சர்வதேச வயது வந்தோர் (அல்லது) இளைய வயதினர் புகையிலை ஆய்வு (2016-17) அறிக்கையின்படி, 2009-2010-ல் 34.6% ஆக இருந்த புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2016-17-ல் 28.6%  ஆக குறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 81 லட்சமாக குறைந்துள்ளது.
  • 2013-14-ல் 21 மாநிலங்களில் உள்ள 42 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத்திட்டம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, 405 மாவட்டங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

பூச்சிகளால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம்

மலேரியா:

  • 2015-ல் 1169261ஆக இருந்த மலேரியா நோய் பாதிப்பின் எண்ணிக்கை, 2017-ல் 840838 என்ற அளவிற்கு 28% குறைந்துள்ளது.
  • மலேரியா பாதிப்பு காரணமாக 2015-ல் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட 2017-ல் 73% ஆக குறைந்துள்ளது.
  • மலேரியா ஒழிப்புக்கான (2017-2022) தேசிய செயல் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது.

டெங்கு & சிக்குன் குனியா:

  • 2013-ல் 394 ஆக இருந்த நோய் கண்டறியும் மையங்களின் எண்ணிக்கை 2018-ல் 618ஆக அதிகரிக்கப்பட்டது.
  • டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் (100 பேருக்கு ஒரு உயிரிழப்பு) கடந்த 3 ஆண்டுகளில் 0.2%  ஆக குறைந்துள்ளது.

காலா அசார்:

  • காலா அசார் பாதிப்பு 37.7% குறைப்பு: 2014-ல் 9241ஆக இருந்த பாதிப்பு அளவு 2017-ல் 5758 ஆக குறைவு
  • 2014-ல் 11 பேர் உயிரிழந்த நிலையில், 2017-ல் உயிரிழப்பே இல்லை என்ற அளவுக்கு காலா அசார் இறப்பு வீதம் குறைக்கப்பட்டது.

யானைக்கால் நோய்:

  • யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு  நிர்ணயம்
  • இந்நோய் பாதிப்புள்ள 21 மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்களில்,  5 மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்கள் இந்த இலக்கை அடைந்துள்ளன.

---



(Release ID: 1534754) Visitor Counter : 1535


Read this release in: English