நிதி அமைச்சகம்

ராஜஸ்தானின் பொது நிதி மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்துவதற்காக, உலக வங்கியுடன் 21.7 மில்லியன் டாலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது

Posted On: 29 MAY 2018 1:05PM by PIB Chennai

ராஜஸ்தானின் பொது நிதி மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்துவதற்காக, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் 21.7 மில்லியன் டாலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்த்த்தில் உலக வங்கியுடன் இந்தியா புதுதில்லியில் இன்று (29.05.2018) கையெழுத்திட்டுள்ளது. 

   31 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்தில், 21.7 மில்லியன் டாலர் தொகையை உலக வங்கி கடனாக வழங்கும். எஞ்சிய தொகை, மாநில அரசின் நிதிநிலை அறிக்கைக்கு அப்பாற்பட்டு செலவிடப்படும்.   இந்த திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

----



(Release ID: 1533757) Visitor Counter : 76


Read this release in: English