பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
விசாகப்பட்டினம் துறைமுகப் பொறுப்புக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசுக் கடன்களின் மீதான தண்டவட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Posted On:
23 MAY 2018 3:45PM by PIB Chennai
விசாகப்பட்டினம் துறைமுகப் பொறுப்புக்கழகத்திற்கு (விபிடி) வழங்கப்பட்டுள்ள அரசுக் கடன்களின் மீதான தண்டவட்டியைக் கீழ்க் காணும் முறையில் தள்ளுபடி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 31.03.2017 வரையிலான விபிடி-யின் தண்டவட்டியான ரூ.250.89 கோடியும் தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டித்தொகையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- தண்டவட்டியைத் தள்ளுபடி செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டிக்கு அபராதமாக 0.25% தொகையை விபிடி வழங்கவேண்டும்.
- தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரை நிலுவையில் உள்ள வட்டியையும், நிலுவையில் உள்ள கடன்தொகையான ரூ.44.69 கோடியையும், 2018-19ஆம் நிதியாணடில் ஒரே தவணையாக விபிடி செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-----
(Release ID: 1533271)
Visitor Counter : 63