பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்துக்கு பிரதமர் அளித்த பதிலுரையின் தழிழாக்கம்

Posted On: 08 FEB 2017 10:32PM by PIB Chennai

நாடாளுமன்ற இரு அவைகளில் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்க நான் விழைகிறேன். இங்கு நடந்த விவாதத்தில், திரு குலாம் நபி ஆசாத்நீரஜ் சேகர், திரு ஏ நவநீத கிருஷ்ணன், திரு டெரிக் ஜி, திரு டி ராஜா, திரு சரத்பவார், திரு சீதா ராம்ஜி, திரு அகமது பாய், திரு ஆனந்த் சர்மா உள்பட சுமார் 40 மாண்புமிக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. விவாதத்தில் பங்கேற்ற மற்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவாதத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய இடத்தைப் பிடித்தது. ஊழல், கருப்புப் பணம்  ஆகிய தீமைகள் நமது நாட்டில் புரையோடிப் போய் நமது பொருளாதாரத்தையும் சமூக அமைப்பையும் பாதித்துள்ளது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. ஆகையால், ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் போர் இல்லை என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. இது எந்த அரசியல் கட்சியையும் துன்புறுத்துவதற்காக நடைபெறும் சண்டை அல்ல. அப்படிக் கருதவும் இடம் இல்லை. எனவே யாரும் இந்த விஷயத்துடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள காரணம் ஏதும் எழவில்லை. இந்த அவையில் அரசியலமைப்பின் வரைமுறைக்கு உட்பட்டு கருத்துக்களைத் தெரிவிக்க நமக்கு உரிமை உள்ளது. இணைப்பொருளாதாரத்தால் ஏழை எளிய மக்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டது என்பது உண்மையே. ஏழைகள் தங்களது உரிமைகளைப் பெற இயலவில்லை. நடுத்தர மக்களும் பாதிப்படைந்தனர். முன்பு இந்த முயற்சி செய்யப்படவில்லை என்பதற்காக இது எடுக்கப்படவில்லை. முயற்சிகள் முன்பும் எடுக்கப்பட்டன. ஆனால் அதிக முயற்சிகள் தேவையாக இருந்தது. இந்த முயற்சிகள் அதிக முயற்சிகளுக்கு வழிவகுத்தால் நாம் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம். அதே சமயம் பிரச்சினைகளை கம்பளத்தின் கீழ் தள்ளி தொடர்ந்து மறைக்க முடியாது.

 

இந்த விஷயத்தில் மிக முக்கிய அமசங்களில் ஒன்று கள்ளநோட்டாகும். வங்கிகளில் பெருமளவு கள்ள நோட்டுகள் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நடைமுறை வங்கிகளுக்கு கள்ள நோட்டுகள் செல்ல முடியாத நிலையை உறுதி செய்தது. கள்ளப்பணம் தீவிரவாதத்தையும், நக்சலிசத்தையும் வளர்க்க பயன்படுத்தப்பட்டது. ஒரு தீவிரவாதியிடமிருந்து சில 2000 ரூ நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு சிலர் கூறிவருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் வங்கிக் கொள்ளை நடந்த சம்பவங்களை நாம் அறிவோம். இந்த நடவடிக்கைக்குப் பின்னர் கள்ள நோட்டுகள் எராளமாகப் புழங்குவது தடைபட்டுள்ளது. வங்கிக் கொள்ளை சம்பவத்துக்குப் பின்னர் கொல்லப்பட்ட சில தீவிரவாதிகளிடமிருந்து இந்த நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இவர்கள் பக்கம் நிற்க வேண்டிய தேவை இல்லை. அதேபோல இவர்களுக்கு எதிராக குரல் எழுப்பவும் சண்டை இடவும் வேண்டியதில்லை என்று பொருள் அல்ல. இந்த நேர்மையற்றவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் நேர்மையானவர்கள் அதிகாரம் பெற்றதாக கருதமாட்டார்கள். எனவே இந்த நடவடிக்கைகள் நேர்மையானவர்களுக்கு பலன் அளிக்கும் என்று நாம் நம்புகிறோம்.

 

மாண்புமிகு தலைவர் அவர்களே,

 

பல ஆண்டுகளுக்கு முன்பு வாஞ்சூ குழு அமைக்கப்பட்டது. அவர் தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை திருமதி இந்திரா காந்தியிடம் சமர்ப்பித்தார். யஸ்வந்த் ராவ் சவான் அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டார். அதை நடைமுறைப்படுத்தவும் விரும்பினார். ஆனால் நாம் அரசியலில் இருக்கிறோம். நாம் தேர்தல்களில் போட்டியிடுகிறோம் என்பதை மறந்து விடக்கூடாது என இந்திரா கூறினார். இது காட்போல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் குறித்து ஒரு சிறிய அளவிற்காவது  விழிப்புணர்வு இருந்திருக்குமானால் அதற்கு எதிராக நீங்கள் குரல் எழுப்பி இருப்பீர்கள். அப்போது நீங்கள் தூங்கிக் கொண்டு இருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? இந்திராகாந்தி மீது இந்த அதிகாரி மிகப்பெரிய குற்றச்சாட்டை எழுப்பியபோது நீங்கள் தூங்கிக் கொண்டா இருந்தீர்கள்? உங்களுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் காட்போல் மீது வழக்குத் தொடுத்திருப்பேன். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. இப்போது அந்த நிலைமை கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. வாஞ்சூ குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தபோது பிரச்சினை கருப்புப் பணம் என்ற அளவில் ஓர் அளவுக்கே இருந்தது. இன்று கருப்புப் பணப் பிரச்சினை தீவிர வாதம், கள்ளநோட்டு, போதைப்பொருள், ஹவாலா வணிகம் எனப் பல பிரச்சினைகளாகப் பரவி விட்டது.

நவம்பர் 8 – ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை முடிவை எடுத்தபோது வங்கிகளுக்கு கள்ளப்பணம் வருவது பற்றிய கேள்வி எழவில்லை. ஏதோ சில நோட்டுகள் ஒரு சிறிய வங்கிக்கு வந்திருக்கலாம் அதை ரிசர்வ் வங்கி பிடித்திருக்கலாம். ஆனால் அந்தத் தருணத்தில் கள்ளப்பணம்  அழிக்கப்பட்டது. கள்ளப்பணம் யாரிடமும் இல்லாதபோது அது குறித்த புள்ளி விவரம் வியப்பை அளிக்கிறது. நமது பகைவர் நாடுகளில், கள்ளப்பண வணிகம் செய்த சிலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது பற்றிய தொலைக்காட்சி செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம்.

 

நவம்பர், டிசம்பர் மாதங்களில் 30, 40 நாட்களுக்குள் 700 மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முதல் முறையாக நம் நாட்டில் சரண் அடைந்ததை நாம் அறிவோம். அந்த நடவடிக்கையின் தொடர் நடவடிக்கை தான் இது. மாவோயிஸ்ட்கள் சரணடைந்தது பற்றிய செய்தியை அறிந்து இந்த அவையின் எந்த உறுப்பிணராவது நிம்மதி அடையாமல் இருப்பார்களா? சிலருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் அதற்கு வேறு காரணங்கள் இருக்க கூடும்.

 

நாட்டின் அமைப்பு முறையில் பணம் மிகவும் அவசியம் என்பது உண்மைதான். 1000 ரூபாய் நோட்டுக்கள் அன்றாட நடவடிக்கைகளில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 500 ரூபாய் நோட்டுக்கள் மிகவும் கீழ் மட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நோட்டுக் கட்டுக்கள் இந்த வணிகத்துக்குச் சென்று வந்தன. இதுதான் உண்மை இதை யாரும் மறுக்க முடியாது. தற்போது இந்தக் கரன்சி நோட்டுகளின் மிகப்பெறும் தொகை வங்கிகளுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களுக்கு கடன் கொடுக்க வங்கிகளின் அதிகாரம் பெருகும். நாட்டின் முதன் முறையாக அனைத்து வங்கிகளும் ஒரே சமயத்தில் வட்டி விகிதங்களைக் குறைத்தன. பொது மக்கள் இதனால் பயனடைந்தனர். சீதாராம் போன்றவர்கள் மற்றும் அவர்களது கட்சி அமைப்பு சாராத் தொழிலாளர்களின் ஊதியப் பாதுகாப்பு பெறுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். இதுதான் வாக்குறுதி அளிக்காமல் ஏற்பட்ட உண்மை நிலை. நாம் எவ்வளவு கொடுத்தாலும் பாதியளவு மக்களுக்கு அந்த அளவு கிடைப்பதில்லை. இது அனைவரும் அறிந்ததே. எனவே அந்த தொழிலாளர்களை வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துடன் இணைக்கும் முறையை உருவாக்கினால் அந்த தொழிலாளர்களுக்கு ஊதியப் பாதுகாப்புக் கிடைக்கும். அந்த திசையில் நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

 

அசாம் தேயிலைத் தோட்டங்கள் குறித்த உதாரணத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அசாம் அரசு ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டது. தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுமார் 7 லட்சம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி கைபேசி செயலி மூலம் எவ்வாறு வணிகம் புரிவது என்பதை அதிகாரிகள் கற்பித்தனர். ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். ரொக்கப் பரிவர்த்தனையே வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதில் சில விஷயங்கள் இருந்ததே அதற்கு காரணம். இருப்பினும் இந்த நடவடிக்கையின் பயனாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்க ஆரம்பித்தது. சம்பளக் குறைப்பு நிறுத்தப்பட்டது. அவர்களின் வணிகமும் பாதுகாக்கப்பட்டது. இது ஒரு மிகச் சிறந்த அனுபவமாகும்.

 

இது போல பத்து வெளிநாட்டு செய்தித்தாள்கள் அல்லது பொருளாதார நிபுணர்களை நீங்கள் குறிப்பிடலாம். நீங்கள் பத்துப்பேர் பற்றிக் குறிப்பிட்டால் என்னால் 20 பேரைப்பற்றிச் சொல்ல முடியும். இந்த முன்முயற்சி இணையற்றதாகும். உலகின் எந்தப் பகுதியிலும் இத்தகைய பெரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஆகையால் உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்களுக்கு இதை மதிப்பிட அளவுகோல் இல்லை. இது பல்கலைக்கழகங்களுக்கும் உலகப் பொருளாதார நிபுணர்களுக்கும் ஆய்வாக மாறலாம்.

 

இந்தியா மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. இது சாதாரண மனிதனின் பலமாகும். சமூக மேலாளர்களும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்று இந்த அவையில் இடம் பெற்றிருக்கும் மதிப்பு மிக்கவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். முதல் முறையாக நாட்டில் கிடைமட்ட அளவில் பிரிவு ஏற்பட்டது. நான் கிடைமட்டப் பிரிவு என்று கூறுவதற்கு காரணம் உள்ளது. ஒரு பக்கம் பொது மக்களும் மறுபக்கம் அரசியல்வாதிகளும் இரு பிரிவாக மாறினர். பொதுவாக அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் கருத்து புரியாது. எப்போதெல்லாம் அரசு ஒரு முடிவு எடுக்கிறதோ அதை எந்த அரசாக இருந்தாலும் மக்கள் அதை எதிர்ப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக மக்களில் ஒரு சிலர் எதிர்ப்பாக இருந்தாலும் பெருமளவினர் அரசுக்குப் பக்கபலமாக நின்றனர். இது திருப்தி அளிக்கும் விஷயமாகும்.

 

சில இடையூறுகள் இருந்தாலும் 125 கோடி இந்தியர்களில் (நீங்கள் சொன்னதுபோல) சில கல்வியறிவு அற்றவர்கள் இந்த்த் தீமைகளை நாட்டைவிட்டுத் துரத்த விரும்பினார்கள். அதற்காகப் போராடினார்கள் என்பது பெருமிதமான விஷயமாகும். எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அல்லது அரசியல் கட்சியாக இருந்தாலும் நம்நாட்டு மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பொருட்படுத்தாமல் இந்த தீமைகளை எதிர்த்து நின்றதைப் பார்த்து பெருமைப்பட வேண்டும். இதைப்பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தலைவர் அவர்களே,

 

இதற்கு முந்தைய கூட்டத்தொடரில் டாக்டர் மன்மோகன்சிங் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அண்மையில் நீங்கள் வெளியிட்ட ஒரு புத்தகத்துக்கு டாக்டர் அவர்கள் முகவுரை எழுதியிருந்தார் என்பது உண்மை. அதை நான் படித்தபோது மிகப்பெரிய பொருளாதார நிபுணரான அவரது பங்களிப்பு அந்தப் புத்தகத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அந்தப் புத்தகம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பதும் அவர் முகவுரை மட்டுமே எழுதியிருந்தார் என்பதும் எனக்குத் தெரியவந்தது.

 

அவரது பேச்சை கேட்டபின்னர் கடந்த 30, 35 ஆண்டுகளாக நான் ஒருபோதும் சொல்லாத ஒரு சொல் பற்றி அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். என்னால் இதை நம்ப முடியவில்லை. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகவும் மரியாதைக்குரிய மனிதர். இந்தியாவின் பொருளாதார முடிவை எடுப்பதில் அவர் தொடர்பு கொண்டிருந்தார். கடந்த 30, 35 ஆண்டுகளில் அவரே முடிவெடுக்கும் நிலையில் இருந்தார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கடந்த 70 ஆண்டுகளில் பாதிக்காலத்தில் பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தியவர் அவர் ஒருவாராகத்தான் இருக்க முடியும். எராளமான ஊழல்கள் வெளியில் வந்துவிட்டன. ஆனால் அவரிடமிருந்து அரசியல் வாதிகள் பாடம் கற்க முடியும். ஏராளமான சர்ச்சைகளுக்குப் பிறகும் அவர்கள் இமேஜ் பாதிக்கப்படவில்லை. மழைக் கோட்டுடன் குளிக்கும் கலையை அவரைத்தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இத்தகைய மகத்தான மனிதர் கொள்ளை அடித்தல்” “மோசடி செய்தல்போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். எல்லைகளைத் தாண்டுவதற்குமுன் ஒருவா் 50 முறை யோசிக்க வேண்டும். அதாவது விமர்சனங்களை எதிர்கொள்ள ஒருவர் தயாராக இருக்க வேண்டும். வினை விதைத்தால்  வினையை அறுக்க நமக்குப் பலம் இருக்க வேண்டும். ஆனால் நாம் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்புக்குள் அதனைச் செய்ய வேண்டும். ஜனநாயகத்தை நாம் மதிக்கிறோம். ஆனால் சிலர் உண்மையை எதிர்கொள்ள தயாராக இல்லையென்றால் எவ்வளவு காலத்திற்கு அதைத் தொடர்வது?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் முயற்சிகள் இருப்பது ஓர் உண்மையே தற்போது சிறிய விபத்துகள் நடந்தால் கூட 2-3 கார்களுக்குத் தீ வைத்து விடுகிறார்கள். ஒரு பேருந்து தாமதமாக வந்தால்கூட பல பேருந்துகள் கொளுத்தப்படுகின்றன. இத்தகைய சம்பவங்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் இத்தகைய சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. உள்ளுக்குள் நடைபெறும் போராட்டங்களை எதிர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, இந்தச் சவால்களுக்கு அப்பால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற நாம் அனுமதிக்கக்கூடாது. இந்திய மக்களின் திறனை உலகத்தின் முன்னால் பெருமிதத்தோடு நாம் முன்வைக்க வேண்டும். அதுபற்றி நாம் பேச வேண்டும். அப்போதுதான் நமது சிந்தனைகளை உலகம் புரிந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

இன்னொரு விஷயத்தையும் இன்று நான் குறிப்பிட விரும்புகிறேன். எனது எண்ணங்களும் சீதாராம் அவர்களின் எண்ணங்களும் மாறுபடுவது இயற்கை. எனவே, விவாதங்களை முன்வைப்பதும் கூட மாறுபடும். ஆனால் நான் இந்தத் தலைப்பைப் பற்றி சிந்தித்தபோது இந்தப் பணியில் சீத்தாராம் அவர்களும் அவரது கட்சியும் எங்களோடு இருக்கும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். ஏனெனில், உங்கள் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திரு. ஜோதிர் மாய் பாசு 1972 –ல் வாஞ்சூ குழு அறிக்கையை அவையில் சமர்ப்பிக்க பெரும் கோரிக்கையை வைத்தார் அதற்காக அவர் போராடினார். அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனைச் சமர்ப்பிக்கவும் இல்லை. கடைசியாக அவரே அந்த அறிக்கை நகல் ஒன்றைக் கொண்டுவந்து அவையில் வைத்தார். ஜோதிர் மாய் பாசு அவர்கள் தனது சொந்த முயற்சியால் தனிப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் அந்த அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார். அந்த நாளில் அவர் ஆற்றிய உரை இப்போதும் கிடைக்கிறது. 1972 ஆகஸ்ட் 26 அன்று அவர் கூறினார்:

ஐயா, 1970 நவம்பர் 12 அன்று சக்தி வாய்ந்த பெருமைக்குரிய குழுவின் முதன்மையான பரிந்துரைகளில் ஒன்றாகப் பணமதிப்பு நீக்கம் இருந்தது. ஐயா, திருமதி இந்திரா காந்தி கருப்புப் பணத்தால் நிலைத்திருக்கிறார். அவரது அரசியல் கருப்புப்பணத்தின் உதவியால் மட்டுமே உயிரோடு இருக்கிறது. அதன் காரணமாகவே இந்த அறிக்கை அமலாக்கப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக அது அமுக்கவும்படுகிறது.” ஜோதிர் மாய் பாசு அவர்கள் 1972 செப்டம்பர் 4 அன்று மக்களவையில் மீண்டும் உரையாற்றினார். அவர் கூறினார், “பணமதிப்பு நீக்கத்தையும் மற்ற நடவடிக்கைகளையும் நான் பரிந்துரை செய்திருந்தேன். இப்போது அவற்றை நான் திரும்பவும் கூற விரும்பவில்லை. இந்த அரசு மக்களோடு நேர்மையுடன் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் பிரதமர் திருமதி இந்திராகாந்தி மற்றும் அவரது அரசின் குணாம்சம் என்பது கருப்புப் பணத்தின், கருப்புப்பணத்தால், கருப்புப்பணத்திற்காக அரசு என்று உள்ளது.” இதுதான் 1972 செப்டம்பர் 4 –ன் சம்பவம். அதுமட்டுமல்ல, சி.பி.. (எம்) –ன் மூத்தத் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்கள் இதே அவையில் 1981 ஆகஸ்ட் 27 அன்று இவ்வாறு பேசினார். “கருப்புப்பணத்தை ஒழிப்பதற்குத் தீவிரமான ஏதாவது நடவடிக்கை எடுக்க உண்மையிலேயே   இந்த அரசு விரும்புகிறதா? நூறு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது போன்ற முடிவுகளை எடுக்க முடியுமா? “இந்தக் கேள்வி சுர்ஜித் அவர்களால் இதே அவையில் 1981 –ல் எழுப்பப்பட்டது. எனவே இந்தப் போராட்டத்தில் குறிப்பாக இடதுசாரிகள் எங்களோடு இணைய நான் வலியுறுத்துகிறேன் நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பவர்கள். நீங்களே இத்தகையை பணியிலிருந்து விலகியிருக்க முடியாது. இதுதான் உங்களுடைய குணாம்சம். இதன் பிறகு காலம் பதில் சொல்லும். ஜனநாயக அமைப்பில் இது போன்று கடுமையான முடிவுகள் எடுக்கும்போது இவையெல்லாம் கவர்ச்சி நடவடிக்கைகள் என்ற கருத்து உருவாக்கப்படுவது உண்மைதான். இது ஜனநாயகத்தின் இயல்பாகிவிடும். இத்தகைய கருத்துகள் உருவாவது குறுகியக் கால இலக்குகள் சம்பந்தமானது. எனவே, இத்தகைய பெரிய முடிவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள சிறிதுகாலம் பிடிக்கும். எனவே, இதற்காக எவரையும் நாம் குறை சொல்ல முடியாது. இதனை எதிர்க்கும் மக்கள் இத்தகைய பெரிய முடிவு நாட்டின் நலனுக்கானது என்பதைப் படிப்படியாகப் புரிந்துகொள்வார்கள். இதனை முன்னெடுத்துச்செல்ல நாங்கள் விரும்புகிறோம்.

டிஜிட்டல் முறையை அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரையிலான அனைத்து உரைகளிலும் ஏதாவது குறைபாடு இருப்பதாகப் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் தண்ணீர் விநியோகம் இல்லை. இல்லாவிட்டால் என்ன என்று அவர்கள் சொன்னார்கள்! அவர்கள் சொன்னதைப்பற்றி நான் ஆச்சரியம் அடைந்தேன்! 70 ஆண்டுகால இந்தியாவின் அரசுகளுக்கு அவர்கள் வழங்கிய மதிப்பீட்டு அட்டை இதுதான். கடந்த 70 ஆண்டுகளில் எனது பங்களிப்பு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே. உங்களால் கட்டப்பட்ட கழிப்பறைகளை நாங்கள் பூட்டிவிட்டோமா? உங்களால் போடப்பட்ட சாலைகளை நாங்கள் சிதைத்துவிட்டோமா? உங்களால் நிறுவப்பட்ட தண்ணீர்க் குழாய்களின் விநியோகப்பாதையை நாங்கள் வெட்டிவிட்டோமா? டிஜிட்டல் முறை என்பது ஒட்டுமொத்த நாட்டிலும் முழுமையாகப் பரவவில்லை என்பது எதார்த்தம்; யாராலும் மறுக்க முடியாத உண்மை. கேள்வி என்னவென்றால் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த சாத்தியம் இருக்கிறதா, இல்லையா, என்பதுதான். எங்கே சாத்தியம் உள்ளதோ அதில் நாம் முயற்சி மேற்கொள்ளலாம் அல்லவா?

ஒருவேளை தில்லி நகரத்தில் சாத்தியம் இருக்குமானால் தில்லியிருந்து நாம் ஏன் தொடங்கக்கூடாது? ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அங்கே நம்மால் செய்யமுடியும். இது நடத்தை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். கொல்கத்தாவில் உள்ள மக்கள் கைப்பேசி வைத்திருந்தால், டிஜிட்டல் தொடர்புகளைக் கொண்டிருந்தால், தொலைதூரக் கிராமங்களில் இந்த வசதி இல்லாவிட்டாலும் கூட அங்கிருந்து நாம் தொடங்க வேண்டும். இரண்டாவதாகப் புதியத் திட்டங்கள் வசதிகள் பற்றி நாம் தம்பட்டம் அடிக்கிறோம். ஆனால், அவை நடைமுறைக்கு வரும்போது நமக்கு ஏன் பிரச்சனைகள் வரவேண்டும்?

இரண்டாவதாக, வார்த்தைகளோடு விளையாடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. எந்தவொரு குழந்தையை, உங்கள் குழந்தையையே கூட தினமும் நீ பள்ளிக்குச் செல்கிறாயா?” என்று நாம் கேட்டால் அவன் கூறுவான், “ஆம் நான் தினமும் செல்கிறேன்ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதையும், அன்று எந்தக் குழந்தையும் பள்ளிக்குச் செல்லாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இதேபோல் ரொக்கப்பணம் இல்லாத சமூகமாக நாட்டை மாற்றுவது என்பதன் பொருள் நாட்டை படிப்படியாக டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்ற முறைக்குச் கொண்டுசெல்வது என்பதுதான். இன்றும்கூட உலகில் வளர்ச்சி அடைந்த பல நாடுகள் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளின் உதவியோடு தேர்தலை நடத்துகின்றன. எழுத்தறிவு குறைந்த நாடாகக் கருதப்படும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொத்தான்களை அழுத்தி வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த முறையை அமலுக்குக் கொண்டுவந்த நாளில் நமது நாட்டின் ஏழையிலும் ஏழையானவர்கள் இந்தத் தொழில்நுட்பங்களை ஏற்பார்கள் என்று யாராவது சிந்தித்திருப்பார்களா?  

நலத்திட்டப் பயன்களை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றும் திட்டம் ஏராளமான நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. இதுபற்றி மக்களவையில் நான் விரிவாக பேசியிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும், வீணாகிவந்த 50,000 கோடி ரூபாயை நாம் சேமிக்க முடிந்துள்ளது. நலத்திட்டப் பயன்களை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்யும் திட்டத்தால் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலாக சேமிக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருசில நபர்கள் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு ஆறு இடங்களைப் பயன்படுத்தியுள்ளனர். கணவரை இழந்தோருக்கான ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் பிறக்காத பெண்குழந்தை கூட ஆவணங்களில் கணவனை இழந்தவராக ஆக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் பெயரில் ஓய்வூதியக் காசோலைகளும் பெறப்பட்டுள்ளன. நலத்திட்டப் பயன்களை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றும் திட்டத்தின் உதவியைக் கொண்டு இதுபோன்ற கசிவுகளால் இடைத்தரகர்கள் பயனடைவதை நாம் தடுக்க முடியும். இந்தத் திட்டத்தின் உதவியால் தற்போது அரசின் கருவூலம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க முடிந்துள்ளது. நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தால் இவ்வாறு நாடு பயனடைந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும்.

அரசு ஒரு நடைமுறையை உருவாக்கியுள்ளது. விற்பனையகங்களில் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற கருவிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கைப்பேசி மூலம் பணம் செலுத்துவதற்கான நடைமுறையை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். இணையதள வங்கி முறைக்காகவும், ஆதார் அடிப்படையிலான  பணப்பரிமாற்றத்திற்காகவும் நாம் பாடுபடுகிறோம். இந்த வழியில்  தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டால் கைப்பேசியின் தேவை இல்லாமலேயே ஆதார் அட்டை  அடிப்படையில்  மட்டுமே பணப்பரிமாற்றங்களை செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை. எனவே, இந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்வதோடு, நமது அணியினரை இவற்றின் அமலாக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். பீம் செயலி என்பது மிகச்சிறந்த ஒரு நடைமுறையாகும். இது மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமாகப் பிரபலப்படுத்தும்போது, வெளிப்புற முகவர்களை வணிகர்கள் கையாள்வது எளிதாக இருக்கும். பயன்களை நேரடியாகப் பெறுவதற்கு இந்த நடைமுறை வகை செய்யும். நாம் இதனை செய்ய வேண்டும்.

தற்போது நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த காத்திருக்க வேண்டியுள்ளதுவாகனங்கள் விற்கும்போது, பெட்ரோல், டீசலுக்காக பெருமளவு பணம் செலவாவதை நாம் அறிவோம். நவம்பர் 8-ஆம் தேதிக்குப்பின் இதுபற்றி நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தற்போது சுங்கக் கட்டணம் செலுத்த ஓட்டுநர்கள் ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். முன்பு வெகுசிலரே இந்த தொழில்நுட்பத்தை பெற முடிந்தது. மிகக்குறுகிய காலத்திலேயே 20 சதவீத வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தற்பொது ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். கார்களுக்கான அனுமதிச் சீட்டுக்களைப் பொறுத்தவரை அது தாமாகவே பதிவு செய்யப்படுவதாகவும், இதற்கான தொகை உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாகவும் அமைந்துள்ளது. இவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் ஏராளமான பெட்ரோலை சேமிக்க முடியும். சுங்கக் கட்டணத்தைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. இதேபோன்று பெட்ரோல் நிலையங்களில் 29-லிருந்து 30 சதவீதம் வரை பணம் செலுத்த டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துகின்றனர். சந்திரபாபுநாயுடு அவர்கள் தலைமையின்கீழ் குழு ஒன்றை நாம் அமைத்திருந்தோம். அதன் இடைக்கால அறிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அறிக்கை ஆய்வு செய்யப்படுகிறது. இறுதி அறிக்கை வரவேண்டியுள்ளது. மாற்றத்திற்கான தயாரிப்புகளை நாம் செய்ய வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயமாக நான் குறிப்பிட விரும்புவது வங்கி நடைமுறையாகும். உங்களின் கருத்துக்கள் எனக்கு மதிப்பீட்டு அட்டை போல் உள்ளது. இதுவே முந்தைய அரசுகளின் மதிப்பீட்டு அட்டையாகவும் இருக்கிறது. கடன் வசூலித்தலுக்கான நடுவர்மன்றத்தை அரசு அமைத்துள்ளது. வங்கிகளில் பணி நியமனத்திற்கு முறையான விதிமுறைகள் இல்லை. அங்கு ஒட்டுமொத்தத்தில் தவறான நிர்வாகம் இருந்தது. தலைவர், நிர்வாக இயக்குநர், இயக்குநர் மற்றும் இன்ன பிறரை நியமிப்பதற்கு வங்கி வாரிய குழு என அழைக்கப்படும் சுயேச்சையான பணி நியமன முகமையை அரசு அமைத்துள்ளது. வங்கி நடைமுறையில் தொழில்முறை நடவடிக்கைகளை இணைக்க நாம் முயற்சி செய்கிறோம்.

வங்கிமுறை, நிதித்துறை, பொருளாதார உலகம் ஆகியவை குறித்து இரண்டு நாள் வட்டமேசைக் கருத்தரங்கம் நடைபெற்றது. நமது நாட்டில் வங்கி முறையை உலகத்தரத்திற்கு எந்த வழியில் உயர்த்துவது என்பது பற்றி அவர்கள் விவாதித்தனர். இந்த பிரச்சினை குறித்து, கலந்தாலோசித்து, விவாதி்த்து, சிந்தித்து, தீர்வுகாணவும் உள்ள குறைகள் பற்றி புரிந்து கொள்ளவும் அவர்கள் முயற்சி செய்தனர்.

ரிசர்வ் வங்கியின் கவுரவம் பற்றி என்னையும், எனது கட்சியையும் எமது அரசையும் நீங்கள் தாக்குவது மிகவும் இயற்கையானது. ஆனால், இதில் ரிசர்வ் வங்கியை இழுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனரை இதில் இழுப்பதற்கும் எந்த காரணமும் இல்லை. இத்தகைய நிறுவனங்களின் கவுரவத்தையும், மாண்புகளையும் பாதுகாக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். முந்தைய ஆளுனருக்கு எதிராகவும், சிலர்  பேசியிருக்கிறார்கள். அது சரியில்லை என்று அதற்கு எதிரான எதிர்ப்பை நான் தெரிவித்திருக்கிறேன். இத்தகைய விஷயங்கள் கருத்து  வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். மற்றவை அரசு நடைமுறைகள், அவை இதே போன்று தொடரலாம். நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் ரிசர்வ் வங்கி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் நம்பகத்தன்மையை பராமரிப்பதற்கு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த அரசைக் குற்றம் சாட்டுவோருக்கு ரிசர்வ் வங்கியின் கவுரவம் பற்றி கேள்வி எழுப்புவோருக்கு மிகுந்த ஏமாற்றத்துடன் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். 2008-இல் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் டாக்டர் சுப்பாராவ், “ஹூ மூவ்ட் மை இன்ட்ரஸ்ட் ரேட்?” என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் நிதித்துறை செயலாளரின் கீழ் கலைப்பு நிர்வாகக்குழு அமைப்பதென்ற அரசின் முடிவு தமக்கு கோபத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். “இந்திய ரிசர்வ் வங்கியின் பணியில் சிதம்பரம் முற்றிலுமாக எல்லையை மீறியிருந்தார். இந்த விஷயம் குறித்து என்னுடன் கலந்தாலோசிக்காதது மட்டுமின்றி இதற்கான அறிவிக்கை வெளியிடுவது பற்றி கூட என்னிடம் கூறவில்லை. இந்த முடிவு எனது பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் நம் இருவருக்குமிடையே மனத்தாங்கலான உறவை  ஏற்படுத்தும் என்பதை எவ்வாறு நான் அறிந்திருக்க முடியும்?” இவ்வாறு முந்தைய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் எழுப்பியிருந்தார். புத்தகத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒருவரும் இதற்கு பதிலளிக்கவில்லை. இப்போது யாராவது இதற்கு பதிலளித்தால் அது வேறு விஷயம்தங்களின் குறைகளை அவர்கள் உணர வேண்டும் என்று இன்று நான் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன். அரசியலை நாம் அதற்கு வெளியே வைத்துக்கொண்டு அதன் கவுரவத்தையும், பெருமிதத்தையும் காப்பதற்குப் பாடுபடவேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்திய ரிசர்வ் வங்கியின் பலத்தை அதிகரிக்க இந்த அரசு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தங்கள் செய்து நிதிக்கொள்கை குழு ஒன்றை நாங்கள் அமைக்க இருக்கிறோம். இவற்றில் பல ஆண்டுகள் விவாதிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. எனவேஇப்போது அதனை நாங்கள் அமைத்திருக்கிறோம். நிதிக்கொள்கை செயல்பாடுகளுக்கு முழுப்பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு அதிகாரிகளோடு, மூன்று நிபுணர்களும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக்குழுவில் மத்திய அரசின் உறுப்பினர் எவரும் இல்லை. இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்த அரசு இவ்வளவு பெரிய சுயாட்சி அளித்திருப்பதை எவரும் கற்பனை செய்ய இயலாது. இது இந்திய ரிசர்வ் வங்கியை வலுப்படுத்தியுள்ளது.

பல பிரச்சினைகள் இங்கே விவாதிக்கப்பட்டிருப்பது உண்மை. எந்த ஒரு அரசும், அதிகாரத்திற்கு வந்துவிட்டு தூங்காது முந்தைய அரசுகள் கூட பல முயற்சிகளை செய்திருக்கின்றன. அவர்கள் எதையும் செய்யவில்லை என்று நான் கூறவில்லை. மற்ற பிரதமரைப் போல் இல்லாமல், சுதந்திரம் பெற்றதிலிருந்து அனைத்து முன்னாள் அரசுகள் மற்றும் பிரதமர்களின் பங்களிப்புகளை செங்கோட்டையின் கொத்தளங்களிலிருந்து நான் பாராட்டியிருக்கிறேன். வழக்கமாக மற்றவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுக் கூற நாம் தயங்குவோம். இந்த உண்மைக்கு வரலாறு சான்றாக உள்ளது. ஆனால், விவாதத்தை மேம்படுத்த இந்த அரசு ஏராளமான பணிகளை செய்திருப்பது உண்மையாகும். சிறிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும்கூட அந்த முடிவுகள் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளித்திருக்கின்றன.

தமக்குத்தாமே சான்றளிக்கும் நடைமுறையை நாம் துவக்கியிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலரின் முத்திரைகளுக்காக அவர்களின் வீடுகளுக்கு முன்னால் மக்கள் வரிசையில் காத்து நின்றார்கள். ஆனால், அவர்கள் அதுபற்றி கவலைப்படவில்லை. கடைநிலை ஊழியரோ, பணியாளர் ஒருவரோ சான்றளிப்பார்கள். தற்போது இந்த முறையை தங்களுக்குத் தாங்களே சான்றளித்துக் கொள்ளும் வகையில் மாற்றியிருக்கிறோம். சாமானிய மக்கள் அந்த சிக்கலிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இறுதியான பணிநியமனத்தின்போது மூலப்படியை அவர் கொண்டு செல்லலாம். இது ஒரு ஜெராக்ஸ் சகாப்தமாக இருக்கிறது. எனவே, இத்தகைய சிக்கலான நடைமுறைகள் எல்லாம் தேவையற்றவை.

நேர்காணல் எனும் நடைமுறையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். தொழில்நுட்பம் மூலம், மக்களின் தகுதியை முடிவு செய்து விடலாம். தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதன்காரணமாக ஊழல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த இரண்டு அவைகளும் 1100-க்கும் அதிகமான சட்டங்களை விலக்கியிருக்கிறது. மூத்த பதவிகளில் நியமனம் தொடர்பான கட்டுரைகளை பல செய்தியேடுகள் வெளியிட்டுள்ளன. முதன்முறையாக நியமனங்கள் தகுதி அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. பழங்கால நடைமுறைகள் அனைத்தையும் நாங்கள் முடிவுக்குகொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து பல நடுநிலை நாளேடுகள் மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதியுள்ளன.

டிபிடி அல்லது நேரடி பணப்பரிமாற்றத் திட்டம் நேரடி பரிமாற்றத்தின் மூலம் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தைப் பதிவுசெய்ய 7 நாட்கள் அல்லது 15 நாட்கள் மற்றும் 2 மாதங்கள்கூட ஆகியிருக்கும். இன்று ஒரு நிறுவனத்தை 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யமுடியும். நாங்கள் அத்தகைய நடைமுறையை உருவாக்கியிருக்கிறோம். முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட் பெற பல மாதங்கள் ஆகும். இன்று ஒரே வாரத்திற்குள் பாஸ்போர்ட் பெற முடியும். தற்போது அஞ்சல் தலைமையகத்தை பாஸ்போர்ட் அலுவலகமாக மாற்ற நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். இந்தத் திட்டத்தில் சாமானிய மனிதர் பயன்களைப் பெற முடியும். அந்த திசையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

நிலக்கரி ஏலம் என்ற விஷயம் பெரிதான ஒன்று என்பதை நாங்கள் அறிவோம். இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் திட்டத்தை அரசு எளிதாக அமல்படுத்தியுள்ளது. பெருமளவில் விவாதிக்கப்படாத ஒரு முக்கிய முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதுபற்றி இந்த அவையில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். அரசால் கொள்முதல் செய்யப்படும் நடைமுறைக்காக ஜிஇஎம் என்பதை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். அரசு இ-சந்தை அல்லது ஜிஇஎம் என்பது உலக வங்கி உருவாக்கியுள்ள கொள்முதலுக்கான தெற்காசிய புதிய கண்டுபிடிப்பு விருதினைப் பெற்றுள்ளது. தற்போது அரசுக்கு தங்களின் பொருள்களை விற்பனைச் செய்ய விரும்புகின்ற எவரும் தங்களின் உற்பத்திப் பொருட்கள் பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவற்றிலிருந்து அரசு தெரிவு செய்துக் கொள்ளும். இது பணத்தையும் மிச்சப்படுத்தும். 5,000 ரூபாய்க்கும் கூடுதலாக பரிவர்த்தனை இருக்குமானால் ஜிஇஎம் மூலமாக பணத்தை செலுத்த முடியும். இந்த திசையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

நாம் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவந்தோம், நல்ல ஆளுகையின் மூலம் ஊழலைத் தடுத்துள்ளோம்.

இந்த அரசு மகளிர்க்கு அதிகாரமளிப்பதற்கு ஏராளமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

உஜ்வாலா திட்டம் (Ujjwala Yojana): ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 கூப்பன்களைப் பயன்படுத்தி, எரிவாயு இணைப்பை மக்களுக்குப் பெற்றுத் தந்ததையும் அதற்காக மக்கள் வரிசையில் நின்றதையும் அறிவோம். 2014ம் ஆண்டு தேர்தலின்போது ஒருவருக்கு 9 சிலிண்டர் தருவதா 12 சிலிண்டர் தருவதா என்று பிரச்சினை எழுந்தது. இந்த அரசின் செயல்பாடு வித்தியாசமாக இருக்கிறது. எரிவாயு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த ஏழைப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கிறது. இன்றுவரையில் ஒரு கோடியே 65 லட்சம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைத்திருக்கிறது. 25 கோடி குடும்பங்களில் 5 கோடிப் பேருக்காவது இந்த வசதி செய்யவேண்டும் என்பது எங்களது இலக்கு.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana)இத்திட்டத்தின் கீழ் வீடுகள் பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் 40 முதல் 45 சதவீதம் பெண்கள் வேலை செய்து பயனடைந்துவந்தனர். இப்போது 55 சதவீதம் பேர் அத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள்.

முத்ரா யோஜனா (Mudra Yojana) திட்டத்தின் கீழ் உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதில் கடனுதவி பெறுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள். இதன் மூலம் பெண்கள் தொழில்முனைவோராவதற்கு முன்வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

பண்டிட் தீனதயாள் அந்த்யோத்யா யோஜனா திட்டம் (Pandit Deendayal Antyodaya Yojana) சில தென் மாநிலங்களில்  சுயஉதவிக் குழுக்கிளின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதை நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கு மாநிலங்களில் செயல்படுத்த முயன்று வருகிறோம்.

சிசு மரணத்தையும் பிரவசத்தின்போது பெண்கள் இறப்பதையும் தடுக்கும் வகையில் கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு ரூ. 6000 தரப்படுகிறது. “பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) பிரசாரத்துக்கு எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அது ஒரு சமூக இயக்கமாகவே மாறிவிட்டது.

சுகன்ய சம்ரிதி யோஜனா(Sukanya Samriddhi Yojana): திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ. 11 ஆயிரம் கோடி மதிப்புக்கு ஒரு கோடிப் பெண்குழந்தைகளின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. 14 லட்சம் அங்கன்வாடிகளில் மொத்தம் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மகிளா சக்தி கேந்திரங்கள் (Mahila Shakti Kendras) தொடங்கப்பட்டுள்ளன.

இந்திர தனுஷ் இயக்கம் (Mission Indradhanush): நோய்த் தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வரும்போதிலும் பல குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை. நாடு முழுதும் சுமார் 55 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை. அக்குழந்தைகள் இந்திர தனுஷ் இயக்கத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தவும் குழந்தைகளைக் காக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் சுகாதாரம் மோசமாக இருப்பது வியப்பாக இருக்கிறது. காரணம் புரியவில்லை. அழுக்கில் வாழ நாம் யாருமே விரும்பவில்லை. இது ஒர் ஒழுக்கம் சார்ந்த நடத்தையாகும். எனினும் கட்டுமானமும் இதில் சம்பந்தப்பட்டதுதான். இது விஷயங்களில் அரசியல்வாதிகளின் பங்கு மட்டும் போதாது. எனினும், தூய்மை இயக்கத்துக்கு ஊடகங்கள் அளிக்கும் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன். தூய்மை இயக்கத்தில் ஊடகங்களின் பங்களிப்பு இன்று பாராட்டுக்குரியதாக இருக்கிறது. அரசாங்கத்தின் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை விமர்சிப்பதே ஊடகங்களின் இயல்பு. ஆனால், தூய்மை இயக்கம் போன்றவை வித்தியாசமானவை. தூய்மை என்பதை ஓர் இயக்கமாக்குவதில் அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் விட ஊடகங்கள் இரண்டு அடி முன்னால் செல்கின்றன. இந்த அவையில் ஊடகங்களைப் பாராட்டுகிறேன்.

கழிவறைகளைப் பற்றிக் குறிப்பிட்டோர் கழிவறைகள் இருக்கின்றன. தண்ணீர் இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இதுபோன்ற இயக்கத்திற்கு மகாத்மா காந்தி ஆதரவாளராக இருந்தார். இன்று மகாத்மா உயிருடன் இருந்து, தூய்மை குறித்து பிரசாரம் செய்தால், இப்போது பேசுவதைப் போல் பேசியிருப்போமா.. ? இதெல்லாம் நமது கடமை இல்லையா? சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சாதகமான நிலையை நாம் எடுக்க வேண்டாமா ? எல்லாவற்றையும் நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

அதே சமயம் முன்பு 42 சதவீதம் சுகாதாரம் இருந்தது. இந்தத் தூய்மை இயக்கத்தை அடுத்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வசிக்கும் பெண்களின் நிலைகளை எண்ணிப் பாருங்கள்கழிவறை இல்லாமல், இருட்டும் வரையில் காத்திருக்க வேண்டும். அந்த வேதனையை எங்கே சொல்வது? இது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல.

பெண்களின் பாதுகாப்புக்காக 181 என்ற எண்ணுள்ள ஹெல்ப்லைன் எல்லோரும்  பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைனை 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்துகிறார்கள். சில மாநிலங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்துகிறார்கள். யூனியன் பிரதேசங்களில் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கு உதவ காவல்துறைத் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட நெட்வொர்க் உருவாக்கியுள்ளனர். அவசர பட்டன் தொழில்நுட்பத்தை (Panic Button Technology) கையாள்கிறார்கள். இதைச் சில நாட்களில் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறோம்.

விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் (Empowerment of the farmers): இதைச் செயல்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana) என்ற திட்டம் மிக முக்கியமானது. இதை விரும்புகிறோமோ இல்லையோ விவசாயிகளின் வருமானத்தைக் காப்பதற்காக வருவாய்க் காப்பீட்டுடன் இதையும் இணைக்கிறோம். பாசன வசதி குறைவாக இருக்கிறது. விவசாயிகள் இயற்கை வளத்தையே நம்பியிருக்கிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், விவசாயி விதைக்க முடியாமல், பயிரிட முடியாமல், அறுவடை செய்ய முடியாமல் போனால், காப்பீடு அவனை ஓரளவு காப்பாற்ற இயலும். சில மாநிலங்களில் 40 முதல் 50 சதவீத விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை விவசாயிகள் மேற்கொள்ள அரசு  ஊக்கம் அளித்து வருகிறது. சில மாநிலங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சில மாநிலங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அவ்வளவாக இல்லை. இது கவலை தருகிறது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

புதிய உரக் கொள்கை (New Fertilizer policy): யூரியா உற்பத்தியில் வேம்பு பூசுதலால் இரு பயன்கள் விளைகின்றன. முன்பெல்லாம் விவசாயிகளுக்கான மானியம் ரசாயன உற்பத்திப் பொருட்களுக்குப் போனது. மேலும், யூரியா செயற்கைப் பால் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டுவந்தது. யூரியாவில் 100 சதவீத வேப்பம் பூச்சு இடுவதால் இனிமேல் விவசாயத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. யூரியாவைக் கள்ளச் சந்தையில் விற்பதும் தடுக்கப்பட்டுவிட்டது.

யூரியா இல்லை என்று எந்த முதலமைச்சரும் கடிதம் எழுதுவதில்லை. யூரியா வாங்குவதற்காக விவசாயி யாரும் கால்கடுக்க வரிசையில் நிற்பதும் இல்லை. யூரியா தட்டுப்பாடும் இல்லை. ஒரு சின்ன நடவடிக்கை எப்படியெல்லாம் பெரிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

நம் நாட்டில் பருப்பு தானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் விளைவாக விவசாய உற்பத்தியில் 50 முதல் 60 சதவீத வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. அரசாங்கத்தின் வேண்டுகோளை விவசாயிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சாதனைகளையும் அவர்கள் முறியடித்துள்ளனர்.

மின்வழி தேசிய சந்தை (e-NAM): மின்வழியாக தேசிய வேளாண் விளைபொருள் சந்தை திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி தனது விளைபொருளை 500 மின்னணு சந்தைகளின் மூலம் விற்க இயலும். இத்திட்டம் முன்பு கைபேசி வழியாக 500 சந்தைகளில் செயல்படுத்தும்போது பயன் தரவில்லை. இன்று, 250 சந்தைகளில் இதற்கான பணி நிறைவுபெற்றுவிட்டது. சில சந்தைகளில் விதிமுறைகள் மாற்றப்பட்டுவிட்டன.

உணவுப் பதனீட்டின் மூலம் விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள் என்பது தெரியும். அதனால், உணவுப் பதனீட்டு முறையை வலியுறுத்துகிறோம். இதில், 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.

பழங்குடியின மக்களுக்கு அதிகாரமளித்தல் (Empowerment of tribal population): பழங்குடியினர் மேம்பாட்டு விஷயத்தில் 28 துறைகள் ஏதாவது ஒரு வகையிலாவது செயல்பட்டு வருகின்றன.

பழங்குடியினத் துணைத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக தொகையை அதிகரித்ததுடன் நில்லாமல் வனச் சகோதர நலன் திட்டத்தின் கீழ் (Vanbandhu Kalyan Yojana)  ஒருங்கிணைந்த திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். இதற்கு நல்லவிளைவு ஏற்பட்டது.

வன உரிமைகள் சட்டம் : வன உரிமைகள் சட்டத்தை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். நம் நாட்டில் பெரும்பாலான சுரங்கப் பணிகளில் நிலக்கரி, இரும்புத் தாது பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் கிடைக்கின்றன. அவற்றின் மூலம் அவர்களுக்குப் பலன் கிடைப்பதில்லை. மாவட்ட கனிம நிறுவனம் (District Mineral Foundation) அரசு அமைத்துள்ளது. முதல் முறையாக கனிமங்களின் மூலம் கிடைக்கும்  வருவாய்க்கு வரியை அரசு விதித்துள்ளது. சத்தீஸ்கர் முதலமைச்சர் தனது மாநிலத்தில் 7 மாவட்டங்களில் உள்ள சுரங்கங்களில் கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. இக்காரணங்களால் இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காகத் தனியாக நிதி ஒதுக்கவும் மாநில அரசுக்குத் தேவையிருக்காது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை ஏழை பழங்குடியின மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். அந்தப் பாதையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பழங்குடியினர் பகுதிகளின் நலனுக்காக தனியாக ஒர் இயக்கத்தை (Rurban Mission) தொடங்கியுள்ளோம். பழங்குடியினர் சந்தை மிகப் பெரிய சந்தையாக அபிவிருத்தி அடைய வேண்டும். அப்படி சந்தை வளர்ச்சி அடைந்தால், கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அண்டையில் உள்ள 50 முதல் 100 கிராமங்களின் மீது கவனம் அதிகரிக்கும். இந்த இயக்கத்தின் (Rurban Mission) கீழ் பழங்குடியினர் பகுதிகளில் 300 புதிய நகரங்களை உருவாக்கி வருகிறோம்.பழங்குடியினர் பகுதிகளின் மேம்பாட்டில் இது பெரும் பங்கு வகிக்கும்.

அதைப் போல் சுகாதாரம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். அதை அடைவதற்காக ஒவ்வொருவருடைய பங்கும் தேவைப்படுகிறது. தனியார் நிறுவனம் மூலம் சுத்தமான நகரங்களுக்கு இடையில் தர வரிசையைக் கணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் கீழ் ஒரு நகரம் சுத்தமாக இருந்தால், மற்றவை அதற்குப் போட்டியாக முன்னேறப் பாடுபடும். இதை நாம் வலியுறுத்தியாக வேண்டும்.

இந்நிலையில், நாட்டில் ஏதாவது ஒரு வகையில் அதிகாரம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நகர பாலிகா, ஜில்லா பஞ்சாயத்து  போன்ற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து போட்டிபோட்டபடி இப்பணியைச் செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, அனைத்து கம்யூனிஸ்ட் ஆளும் நகரங்களும் ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு மாவட்ட பஞ்சாயத்துப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணியை நிறைவேற்ற வேண்டும். இந்தப் போட்டியை நாம் தொடர்ந்து முன்னெடுத்தால், சுத்தமும் சுகாதாரமும் வெற்றி பெறும். இது அரசாஙகத் திட்டமல்ல. மக்கள் இயக்கம் ஆகும்.

இன்றைய தேவை நடத்தையில் மாற்றம்தான். இவ்வாறு சுத்தமும் சுகாதாரமும்  பேணப்படாத காரணத்தால், மக்கள் உடல்நலத்தைக் காப்பதற்காக ரூ. 2.5 லட்சம் கோடி செலவாகிறது என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. இது இந்தியாவைக் குறித்த அறிக்கையாகும். ஏழை மக்கள் ஆண்டுதோறும் 7000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. சுகாதாரமில்லாத நிலைகளால் நோய்கள் ஏற்படுகின்றன என்பது இயல்பு. இந்த நிலையை நாம் தவிர்க்க வேண்டும். தவிர்ப்போம்.

குழந்தைகள் தங்களது கைகளை நன்றாகக் கழுவிய பிறகே உணவு உண்ண வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறோம். இப்படிச் சொல்லும்போது, குழாயில் தண்ணீர் இல்லையே என்று யாராவது சிலர் புகார் கூறக் கூடும். இப்படி நான் நினைப்பது சரிதானா? இப்படியெல்லாம் யோசிப்பது வியப்பைத் தரலாம். எதிலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் புதிய பாதைகளை நாம் கண்டறிய முடியும். குழந்தைகளைக் கையைக் கழுவும்படி அறிவுறுத்துகிறோம் அதே சமயம் புகாரும் கூறி வருகிறோம். இந்த மாதிரி இருந்தால் நாட்டில் மாற்றம் கொண்டுவருவது இயலாது. எனவே, பாதிக்கக் கூடிய பின்னடைவுக் மனநிலையில் இருக்கக் கூடாது. தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நமக்கு அண்மையில் உள்ள சிறிய நாடுகள் தூய்மையான நாடாவதற்கு 15 ஆண்டுகள் அவகாசம் இருந்தது. அந்த நாடுகள் தான் நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அப்படியானால், நம் இந்தியாவில் அது சாத்தியமில்லையா? சிறிய நாடுகளே செய்யும்போது நம்மால் முடியாதா ? இதுதான் நமது கனவாக இருக்க வேண்டும். நாம் அந்த திசையில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

சில சமயம் மாறுபட்ட சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக உணர்வேன்.

நகரம் உன்னுடையது.

நீதான் கொலைகாரன். நீதான் தியாகியும்

நீ மட்டும்தான் ஆட்சி நடத்துபவன்

என்று கவிதை உண்டு. இந்த மனோபாவத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

இன்னொரு தலைப்புடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். “ஒரே இந்தியா, சிறந்த இந்தியா” (Ek Bharat Shreshtha Bharat) என்ற கொள்கைத் திட்டம் சர்தார் வல்லப பாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி தொடங்கப்பட்டது.

மற்ற நாடுகளில் உள்ள மாநிலங்களுடன் இணைந்து சகோதர மாநிலங்களையும், மற்ற நாடுகளில் உள்ள நகரங்களுடன் இணைந்து சகோதர நகரங்களையும் உருவாக்கி வருகிறோம். ஆனால், நம் நாட்டுக்குள்ளேயே இதைப் போல் உறவாடுவதில்லை. பல மாநிலங்கள் தாங்கள் கைவிடப்படுவதாக வருத்தப்படுகின்றன. நமது நாட்டின் ஆற்றலையும் திறமையையும் பயன்படுத்தக் கொள்வது மிகவும் அவசியமாகும். “ஒரே இந்தியா, சிறந்த இந்தியாஉருவாகப் பாடுபட்டு வருகிறோம். அதை இந்த அவையில் உள்ள  உறுப்பினர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று விரும்புகிறோம். உதாரணத்திற்கு, தற்போது 12 மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. அவற்றில், தெலுங்கானா, அரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அரியானாவில் உள்ள மக்கள் நூறு தெலுங்குச் சொற்றொடர்களையாவது அறிந்திருக்க வேண்டும். “மருத்துவமனை எங்கே இருக்கிறது? ரிக்ஷா எங்கே கிடைக்கும்? காவல் நிலையம் எங்கே இருக்கிறது? உணவகம் எங்கே இருக்கிறது?” போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இவற்றை அவர்களால் கற்றுக் கொள்ள முடியும்.

அதைப் போல அரியான்வி மொழியை தெலுங்கானா மக்கள் கற்றுக் கொள்ளவேண்டும். தெலுங்கானா திரைப்பட விழாவை அரியானா நடத்த வேண்டும். அரியானா திரைப்பட விழா தெலுங்கானாவில் நடத்தப்பட வேண்டும். அது  போல் விநாடி வினா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாட செய்ய வேண்டும். அரியானா குழந்தைகள் தெலுங்கானா நடத்தும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். இதுபோன்ற பிரசாரம், நிகழ்வு ஆகியவை நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். இதை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்தியில் சிலவற்றைக் கூற முடியாமல் இருக்கும். ஆனால், அதை வெளிப்படுத்த தமிழில் மிகச் சிறந்த சொற்கள் தமிழில் இருக்கும். அந்தச் சொற்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். அதைப் போல மராத்தியிலோ வங்காள மொழியிலோ அழகான சொற்கள் இருக்கக் கூடும். அவையெல்லாம் நமக்குப் பரிச்சயமாக இல்லாதிருக்கும். நமது நாட்டுக்குப் பெரிய பலம் இருக்கிறது. அந்த பலத்தை மேலும் அதிகரிக்க ஒரே பாரதம், சிறந்த  பாரதம்என்ற அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அவையில் தங்களது நல்ல கருத்துகளையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்ட அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரது உரைக்கு எனது ஆதரவை தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்!

அனைவருக்கும் நன்றி!!

*******

 

 



(Release ID: 1532047) Visitor Counter : 650


Read this release in: English