குடியரசுத் தலைவர் செயலகம்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 31 MAR 2018 2:45PM by PIB Chennai

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச்  செய்தியில் தெரிவித்ததாவது:  ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, அனைத்து  மக்களுக்கும், முக்கியமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த புனித தினமான ஈஸ்டர் தினம் நமது உள்ளங்களில் மகிழ்ச்சியையும், சமத்துவத்தையும் கொண்டு வரட்டும்.  பல்வேறு மதங்களுக்கு இடையே அவசியமான அமைதியையும் சகோதரத்துவத்தையும் அடைய ஏசு கிறிஸ்துவின் போதனைகள் வழிநடத்தட்டும்.

நமது நாட்டிலும், நமது பகிர்வுத் தன்மை கொண்ட சமூகத்திலும் நாம் நலமாகவும், செழிப்பாகவும் வாழ நம்மிடையே ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை இந்த பண்டிகை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியின் இந்தி வடிவத்தை http://pib.nic.in-ல் படிக்கலாம்.

------



(Release ID: 1527194) Visitor Counter : 73


Read this release in: English