சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார நிதி

Posted On: 16 MAR 2018 3:21PM by PIB Chennai

நாட்டில் தேசிய சுகாதார நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

     உயிர்க்கொல்லி நோயால் அவதியுறும் வறுமைக்கோட்டிற்கும் கீழேயுள்ள நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவமனைகள் / நிறுவனங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற நிதி வழங்குவதற்கு தேசியச் சுகாதார நிதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

     தேசிய சுகாதார நிதித்திட்டத்தின் கீழ் சுழல் நிதியாக மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவியாக 2 லட்சம் வரை வழங்க  நாடு முழுவதும் உள்ள 13 மத்திய அரசு மருத்துவமனைகள் / கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

     இதய நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, மூட்டு வலி, நரம்பியல், உட்சுரப்பியல், மனநல பாதிப்பு உள்ளிட்ட நோய்க்கான சிகிச்சைகள், மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் மற்ற தேவைகள் ஆகியவற்றிற்காக இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.

 

 

தமிழகத்திற்கு தேசிய சுகாதார நிதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி

 

(ரூபாய்)

 

மாநிலம்

2017-18 (16.02.2018வரை )

 

நோயாளிகளின் எண்ணிக்கை

தொகை (லட்சம்)

 

தமிழ்நாடு

22

59.65

 

         

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.gov.in பார்க்கவும்.


(Release ID: 1524954)
Read this release in: English