தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பிரதமரின் ஷ்ரம் விருதுகள் 338 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன

Posted On: 24 FEB 2018 4:42PM by PIB Chennai

பிரதமரின் ஷ்ரம் (தொழிலாளர்) விருது வழங்கும் விழா, புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.சந்தோஷ் குமார் கங்வார் முன்னிலையில், குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, 338 தொழிலாளர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளார்.

2011 முதல் 2016 ஆண்டு வரையிலான  பிரதமரின் ஷ்ரம் விருதுகள், “ஷ்ரம் ரத்னா விருது“, “ஷ்ரம் பூஷண் விருது“, “ஷ்ரம் வீரர்-வீராங்கனை விருது“ மற்றும் ”ஷ்ரம் ஸ்ரீஷ்ரம் தேவி விருதுகள்” வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய-மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு- www.pib.nic.in காணவும்.

 



(Release ID: 1521693) Visitor Counter : 130


Read this release in: English