பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

116.95 கி.மீ. தூர பாட்னி-ஆர்னிகர் வழித்தடத்தை ரூ.1300.9 கோடி செலவில் மின்மயத்துடன் இரட்டிப்பாக்க சிசிஈஏ ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 20 FEB 2018 1:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஈஏ) 116.95 கி.மீ. தூர பாட்னி-ஆர்னிகர் வழித்தடத்தை ரூ.1300.9 கோடி செலவில் மின்மயத்துடன் இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2021-22-ல் நிறைவடையக்கூடும். இந்தத் திட்டம் உத்தரப்பிரதேசத்தில் தியோரியா, பல்லியா, மாவ், காஸிப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

     அதிக வேகம், ரயில் தாமதங்களைக் குறைத்தல், ரயில் பாதையை அல்லது குறிப்பிட்ட வழித்தடத்தைப் பராமரிக்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பை விரிவுபடுத்துதல், எதிர்காலத்தில் போக்குவரத்தை அதிகப்படுத்திக் கூடுதல் திறனை உருவாக்குதல் ஆகியவற்றை இந்த இரட்டைப் பாதைத் திட்டம் உறுதி செய்யும்.



(Release ID: 1521083) Visitor Counter : 118


Read this release in: English