பிரதமர் அலுவலகம்

உலக துரித சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் பிரதமர் வாழ்த்து

Posted On: 29 DEC 2017 11:07PM by PIB Chennai

உலக துரித சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக விஸ்வநாதன் ஆனந்த்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்தினார்.

“வாழ்த்துகள் விஸ்வநாதன் ஆனந்த். உங்கள் திறமையை நீங்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறீர்கள். உங்கள் வேகம் எங்களை ஊக்குவிக்கிறது. உலக துரித சதுரங்கப் போட்டியில் உங்களது தன்னிகரற்ற வெற்றிக்கு இந்தியா பெருமை கொள்கிறது.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1514821) Visitor Counter : 97


Read this release in: English