பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்
Posted On:
05 DEC 2017 5:58PM by PIB Chennai
மிகவும் கடுமையான சூறாவளிப் புயல் ஓக்கி பாதிப்பையடுத்து தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சதீப், மினிக்காய் தீவுகளில் (நேற்று கடற்படைத் தினம் கொண்டாடப்பட்ட நிலையிலும்) கடற்படையின் தேடுதல் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. மேற்கத்திய கடற்படை பிரிவின் ஐஎன்எஸ் சென்னை, கொல்கத்தா, ட்ரைகண்ட் உள்ளிட்ட எட்டு கடற்படைக் கப்பல்கள் பாதிக்கப்பட்ட தீவுகளில் உதவிக்காக நிறுத்திவைக்கப்ட்டன. மேலும் கிழக்கத்திய கடற்படை பகுதியின் நீண்ட தொலைவு கடற்சார் ரோந்துப்பணி விமானம் பி-81 உட்பட தெற்கத்திய கடற்படை பகுதியில் அதன் வசம் உள்ள விமானங்கள் நாள் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மினிக்காய் தீவில் இம்மாதம் மூன்றாம் தேதி பேரிடர் உதவிப் பொருட்கள் வந்திறங்கின. நேற்று கவரட்டி, கால்பெனி, தீவுகளுக்கும் இந்திய கடற்படைக் கப்பல்கள் சாரதா, சென்னை ஆகியவற்றின் மூலம் உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அரிசி, பருப்பு, உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட உணவுப்பொருட்களும் தண்ணீர், போர்வைகள், மழைக்கோட்டுகள், ஆடைகள், கொசு வலைகள், தரைவிரிப்புகள் என நான்கு டன் பேரிடர் உதவிப் பொருட்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஐஎன்எஸ் த்வீப்ரக்சக் என்ற கப்பலில் இருந்து இந்திய கடற்படை ஹெலிக்காப்டர் மூலம் உலர்ந்த உணவுப் பொருட்கள், உடனே சாப்பிடக்கூடிய உணவுகளும் அனுப்பிவைக்கப்பட்டன. மினிக்காயில் உள்ள கடற்படை பிரிவின் ஊழியர்கள், சாலைகளை போக்குவரத்துக்கு சரிசெய்வதிலும் உணவு மற்றும் ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்குவதிலும் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவி செய்தார்கள்.
பித்ரா தீவில் இருந்து 70 மையில் தூரத்தில் உள்ள இடத்திலிருந்த ஐலன்ட் குயின் மீன் பிடிபடகில் இருந்து ஒன்பது பேரை ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பல் மீட்டது. இந்தப் படகு 15 நாட்களுக்கு முன்னதாக காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்த படகில் இருந்தவர்கள் சுமாரான நிலையில் இருந்தனர்; அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் உதவிப் பொருட்கள் கடற்படைக் கப்பலில் இருந்து உடனடியாக வழங்கப்பட்டன. அவர்களது தேவை அடிப்படையில், அந்த மீன் பிடி படகு இரண்டு மணிநேரம் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு நல்ல பருவநிலை நிலவிய இடத்தில் விடப்பட்டது. இந்த மீனவர்கள் அனைவரும் கொச்சிக்கு அருகே உள்ள தோப்பம்பாடியை சேர்ந்தவர்கள்
கவரட்டித்தீவில் கொச்சியில் இருந்து சென்ற கடற்படை ஹெலிக்காப்டர் ’சீ கிங்’ நிறுத்தி வைக்கப்பட்டது. ஆட்களையும் பொருட்களையும் தீவுகளுக்கிடையே கொண்டு செல்ல இந்த ஹெலிக்காப்டர் நன்றாகப் பயன்படுத்தப்பட்டது. ஐஎன்எஸ் ஜமுனா, ஐஎன்எஸ் நிரீக்சக் ஆகிய கப்பல்கள் மீட்ட, கேரளாவைச் சேர்ந்த 11 மீனவர்கள், ஐஎன்எஸ் கல்பேனி கப்பல் மூலம், கொச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மினிக்காய் தீவில், அனைத்து பேரிடர் உதவிப் பொருட்களும் ஐஎன்எஸ் சார்துல் கப்பலில் இருந்து இறக்கப்பட்டன. இந்தக் கப்பலில் கூடுதலான தேடுதல் மீட்பு நடவடிக்கைகளுக்கான நீர்முழ்கி குழுவினரும் கடற்படை ஹெலிக்காப்டரும் இடம் பெற்றுள்ளனர். இதில் உள்ள உதவிப் பொருட்கள் 2000 பேருக்கு ஏழு நாட்களுக்கு போதுமானதாகும்.
ஐஎன்எஸ் த்ரிக்கண்ட் கப்பல் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேடுதல் மீட்புப் பணிகளை முடித்துக் கொண்டு பேரிடர் உதவிப் பொருட்களுடன் பித்ரா தீவுக்கு இன்று (05.12.2017) காலை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட உதவிப் பொருட்கள் தீவில் உள்ள மக்களின் தேவைகளை, நிலைமை சீரடையும் வரை சந்திக்க போதுமானதாகும்.
லட்சத் தீவு, மினிக்காய் பகுதியில் உள்ள அனைத்து தீவுகளும் இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமான தேடுதல் மீட்புப் பணி சேவையைப் பெற்றன. இந்தத் தீவுகளில் மிகுந்த விரைவில் இயல்பு நிலையை திருப்பச்செய்வதில் உறுதியுடன் இந்தியக் கடற்படை செயலாற்றுகிறது. விரைவான குறித்த நேரத்திலான இந்திய கப்பற்படையின் செயல்பாட்டினால் கடலில் இருந்து 148 பேர் காப்பாற்றப்பட்டனர். இவர்களில் இந்திய கடற்படைக் கப்பல்கள் ஜமுனா, நிரீக்சக், சாகர்தூவானி கப்பல்கள் காப்பாற்றிய 11 மீனவர்கள் ஐஎன்எஸ் கல்பினியன் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டனர். மேலும் இந்தக் கப்பல்கள் பாதிக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்டவற்க்கு உதவிப் பொருட்களை வழங்கியது.
(Release ID: 1511876)
Visitor Counter : 172