விவசாயத்துறை அமைச்சகம்

நடப்பு 2017-18 நிதியாண்டில் வருடத்திற்கான இலக்கை 6 மாதங்களில் எட்டி NCDC சாதனை : திரு. ராதாமோகன் சிங்

2016-17 நிதியாண்டில் NCDC ரூ.25270 கோடி ஒதுக்கியது & முன் எப்போதும்விட அதிக அளவாக ரூ.15915 கோடி பட்டுவாடா செய்தது : திரு. சிங்
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கார்ப்பரேசனின் 82வது பொதுக் குழு கூட்டத்தில் திரு ராதாமோகன் சிங் உரை

Posted On: 21 NOV 2017 5:39PM by PIB Chennai

நடப்பு 2017-18 நிதியாண்டில் NCDC நிறுவனம் தனது அருமையான செயல்பாட்டைத் தொடர்வதுடன், முழு ஆண்டுக்கான இலக்கை முதல் 6 மாதங்களிலேயே எட்டியதன் மூலம் சாதனை படைத்திருக்கிறது என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு. ராதாமோகன் சிங் கூறியுள்ளார்.

     2016 - 17 நிதியாண்டில் NCDC ரூ.25270 கோடி ஒதுக்கீடு செய்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.15915 கோடி பட்டுவாடா செய்துள்ளது என்று உறுப்பினர்களிடம் திரு. ராதாமோகன் சிங் தெரிவித்தார். கூட்டுறவுகளுக்கு நிதியுதவி அளிப்பதில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தநிறுவனம் கணிசமான அளவுக்கு 254% வளர்ச்சி கண்டிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதுடெல்லியில், கிரிஷி பவனில் 2017 நவம்பர் 21-ல் நடைபெற்ற NCDC 82வது பொதுக் குழு கூட்டத்தில் இந்தத் தகவல்களை அமைச்சர் தெரிவித்தார்.


*****

 



(Release ID: 1511214) Visitor Counter : 85


Read this release in: English