உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சருடன் திரு. பில்கேட்ஸ் சந்திப்பு

Posted On: 16 NOV 2017 6:59PM by PIB Chennai

கேட்ஸ் அறக்கட்டளையில் இணைத் தலைவரும் அறங்காவலருமான திரு. பில்கேட்ஸ் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை நவம்பர் 16 அன்று புது தில்லியில் சந்தித்தார். திரு. பில்கேட்சை வரவேற்ற மத்திய உள்துறை அமைச்சர், இந்தியாவில் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மேற்கொள்ளும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்துப் பாராட்டினார். இந்தியாவில் சுகாதார விழிப்புணர்வு திட்டங்களுக்கு முன் முயற்சி எடுக்குமாறு திரு. பில் கேட்சைக் கேட்டுக்கொண்ட திரு. ராஜ்நாத் சிங், இந்த அறக்கட்டளை வளர்ந்து வரும் கிராமங்களில் கவனம் செலுத்தி அவற்றை “மாதிரி கிராமங்கள்“ ஆக்க வேண்டும் என்றும் அப்போது தான் உள்ளூர் மக்கள் கவரப்படுவார்கள் என்றும் ஆலோசனை கூறினார். வேளாண் மற்றும் சுகாதாரத் துறையில் தங்களால் ஏற்கப்பட்ட பல்வேறு தொழில் நுட்பங்கள் பற்றி திரு. பில் கேட்ஸீம் விவரித்தார்.

     தங்கள் அறக்கட்டளை இந்தியாவுக்கு ஆக்க பூர்வமான உதவிகளைச் செய்யும் என்று திரு. பில்கேட்ஸ் மத்திய உள்துறை அமைச்சருக்கு உறுதியளித்தார்.



(Release ID: 1510412) Visitor Counter : 80


Read this release in: English