குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கிராமப்புற தொழில்முனைவோரின் வளர்ச்சி மாற்றமிகு இந்தியாவுக்கு தேவை- குடியரசு துணைத்தலைவர்
சர்வதேச வழிகாட்டி மாநாட்டில் உரை
Posted On:
09 NOV 2017 2:31PM by PIB Chennai
கிராமப்புற தொழில்முனைவோரின் வளர்ச்சி மாற்றமிகு இந்தியாவுக்கு தேவை என்று இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையநாயுடு கூறியுள்ளார்
பாரதிய யுவசக்தி அறக்கட்டளை (பி.எஸ்.ஒய்.,)யின் வெள்ளி விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இளம் தொழில்முனைவோர் சர்வதேச வழிகாட்டி மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய வெங்கையநாயுடு இவ்வாறு கூறினார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து இளவரசர் மற்றும் பல்வேறு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இன்றைக்கு கிராமப்புற இந்தியா வேகமாக மாற்றம் அடைந்துவருகிறது என்றும் ஊரக இளைஞர்கள் தகவல் விவரங்களை தெரிந்து வைத்துள்ளதாகவும் கூறினார். அத்துடன் கற்றுக்கொள்வதிலும் தொழில் உணர்விலும் அவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், அதுதான் இன்றைக்கு உலகாளாவிய அபிலாஷைகளாக இருக்கிறது என்றும் கூறினார். உலகில் தலைசிறந்த பொருளாதார விரைவு வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா என்ற இலக்கினை எட்டும் வகையில் மத்திய அரசும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தொய்வின்றி பணியாற்றி வருகிறது என்றும் வெங்கைய நாயுடு புகழாரம் சூட்டினார். எழுமின் இந்தியா திட்டம், அடல் புத்தாக்க திட்டம் போன்றவை தொழில் தொடங்குவதற்கான சாதக நிலையை உருவாக்கித் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் நோக்கமே நகர்புற ஏழைமக்களின் வறுமையையையும், பாதிப்புகளையும் போக்கி அவர்களுக்கு பலன் அளிக்க கூடிய சுய வேலைவாய்ப்பையும், திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு சூழ்நிலையையும் வழங்குவதாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஏழைகள் தொழில் முனைவோராக மாறி வறுமையில் இருந்து வெளிவருவது தான் அரசின் திட்டங்களின் பிரதான நோக்கமாகும் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், அவர்களின் திறமைக்கு ஏற்ப அர்த்தமுள்ள மற்றும் நீடித்த வாழ்வாதார உரிமைகளை வழங்குவது தான் இந்த திட்டங்களின் உன்னத நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இந்த தரப்பு மக்களுக்கு கடன் கிடைப்பதில் உள்ள சிரமங்களை போக்குதல், தொழில்நுட்ப உதவி கிடைத்தல், சந்தைப்படுத்தலில் ஆதரவு அளித்தல், போன்றவை பாரதிய யுவசக்தி அறக்கட்டளை போன்ற அமைப்புகளால் கண்டறியப்பட்டு ஈடுசெய்யப்பட்டு அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் வேலைதேடுபவர்களாக இருப்பதை மாற்றி அவர்களை வேலை கொடுப்பவர்களாக அதாவது தொழில் முனைவோர்களாக மாற்றுவதில் உள்ள சவால்களை களைந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல கிராமப்புற இந்தியாவில் வாழ்பவர்களுக்கு கவுரவமான வாழ்வாதாரத்தினை கொடுக்க தேவையான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டார்..
*****
(Release ID: 1509442)