பாதுகாப்பு அமைச்சகம்

மாண்புமிகு குடியரசுத்தலைவருக்கு தேசிய குழுவின் அனைத்துத் தலைவர்களின் பிரியாவிடை விருந்து

Posted On: 22 JUL 2017 6:28PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மற்றும் இராணுவப்படையின் முதன்மைத் தலைவரை கவுரவிக்கும் வகையில் தேசிய குழுவின் அனைத்துத் தலைவர்களால் பிரியாவிடை விருந்து ஜூலை 17, 2017 அன்று அளிக்கப்பட்டது.


குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மாண்புமிகு பாதுகாப்பு இணை அமைச்சர், சேவை முதன்மையாளர்கள் மற்றும் சேவைகளுக்கான மூத்த இராணுவம் மற்றும் பொதுவினர்சார் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தினர் பங்கேற்றனர்.


மானெக்ஷா மையத்தில் நடத்தப்பட்ட எளிமையான, நேர்த்தியான விழாவில் இராணுவப்படைகளின் முதன்மைத் தலைவருமான குடியரசுத்தலைவர் அனைத்து மூத்த இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

 

தேசிய குழு முதன்மையாளர்களின் தலைவர் மற்றும் கடற்படை அலுவர்களின் தலைவர் குடியரசுத்தலைவரின் மதிநுட்பத்துக்கு நன்றி தெரிவித்து அனைத்து இராணுவப் படைகளின் அலுவலர்களுக்கும் பெரும் ஊக்க சக்தியாக விளங்கியதாகவும் கூறினார். குடியரசுத்தலைவர் தனது பிரியாவிடை உரையில் இராணுவப்படையின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைக் கூறினார். தேசத்துக்குத் தியாகம் புரிந்து மறைந்த தியாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த பாராட்டுரைகளை வழங்கினார்.

 

****

 



(Release ID: 1508975) Visitor Counter : 63


Read this release in: English