குடியரசுத் தலைவர் செயலகம்

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்

Posted On: 31 OCT 2017 2:30PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இன்று அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதற்கு முன், இன்று காலை புது தில்லியில் உள்ள படேல் சதுக்கத்தில் உள்ள சர்தார் படேல் உருவ சிலைக்கு குடியரசுத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயர் தோட்டத்தில் அவர் மரக் கன்றும் நட்டார்.

***



(Release ID: 1507725) Visitor Counter : 109


Read this release in: English