பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சரின் லடாக் பயணம்

Posted On: 30 SEP 2017 7:04PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் எல்லைப்பகுதியில் உள்ள லே, லடாக், சியாச்சின் ஆகியவற்றுக்கு 2017, செப்டம்பர் 30 அன்று பயணம் செய்து அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். அவரது பயணத்தின் போது ராணுவத் தளபதியும், வடக்குப் பிராந்திய ராணுவ கமாண்டரும் லடாக் வீரர்களின் கமாண்டரும் உடனிருந்தனர். சியாச்சின் பனிமலைப்பகுதியின் தொலை தூரத்தில் உள்ள வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடினார். தசரா புனித விழாவையொட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். துர்புக் மற்றும் தவ்லத் பெக் ஒல்டி (டிபிஓ) இடையேயான சாலையை இணைக்கும் விதமாக ஷியோக் ஆற்றின் மீது பிஆர்ஓ படைப்பிரிவால் கட்டப்பட்ட பாலத்தையும் அவர் திறந்துவைத்தார். தமது லே பயணத்தின் போது அங்குள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

******



(Release ID: 1506175) Visitor Counter : 103


Read this release in: English