குடியரசுத் தலைவர் செயலகம்

இந்தியக் குடியரசுத் தலைவர் நாளை மகாராஷ்ட்ரா பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2017 7:05PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாளை (அக்டோபர் 1, 2017) மகாராஷ்ட்ராவுக்கு (ஷிர்டி மற்றும் மும்பை) பயணம் மேற்கொள்வார்.

     ஷிர்டியில், ஷிர்டி சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், ஷிர்டியிலிருந்து மும்பைக்கு விமானத்தையும் கொடியசைத்து அனுப்பிவைப்பார். பின்னர், ஷிர்டி சாய்பாபா சமாதியின் நூற்றாண்டு நிகழ்ச்சிகளையும் அவர் தொடங்கி வைப்பார்.

     தில்லி திரும்பும் முன், மும்பையில், திறந்த வெளி கழிப்பிடமற்ற நகர்ப்புற மகாராஷ்ட்ரா என்பதை அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார்.

 

******


(வெளியீட்டு அடையாள எண்: 1506166) வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க: English